தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 7ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் மலர் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு  குண்டு மல்லி, ஊசிமல்லி, பட்டன் ரோஸ், கனகாம்பரம், முல்லை, சாமந்தி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

 

இங்கு அறுவடை செய்யும் பூக்கள் அனைத்தும் தர்மபுரி நகரப் பேருந்து நிலையத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும் இங்கு விளைவிக்கக் கூடிய பூக்கள் ஓசூர், சென்னை, பெங்களூர், ஈரோடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி பூ மார்க்கெட்டில் தினசரி 10 டன் முதல் 20 டன் வரை பூக்களை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.

 



 

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பூக்கள் சந்தையில், கடந்த ஒரு வாரமாக பூக்களின் விலை விலை குறைந்து விற்பனையாகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிக விலைக்கு விற்கப்பட்ட பூக்கள், தற்போது குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. மேலும் வழக்கமாக புரட்டாசி மாதங்களில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு விலை குறைந்து விற்பனை ஆவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

 



 

இன்றைய சந்தையில் சன்னமல்லி கிலோ 300 ரூபாயிலிருந்து, 220 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்பனையான  குண்டுமல்லி கிலோ 320 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 800லிருந்து 300 ரூபாய் என குறைந்து விற்பனையானது. மேல அரளி கிலோ 300லிருந்து 40 ரூபாய்க்கு, சாமந்தி கிலோ 70 லிருந்து 20 ரூபாய் என குறைந்துள்ளது. தொடர்ந்து சம்பங்கி கிலோ 20, சென்டுமல்லி கிலோ 10, பட்டன் ரோஸ் 20-க்கு விற்பனையானது.

 

மேலும் புரட்டாசி மாத விதமான சனிக்கிழமைகளில், காலை 9 மணிக்கு  பூக்கள் விற்றுத் தீரும் சாமந்திப் பூக்கள், இன்று  விற்பனையாகமால் தேக்கமடைந்துள்ளது. மேலும் கடந்த இரண்டு வாரங்களாக பூக்கள் வரத்து அதிகமாக இருந்த போதிலும், விலை உயர்ந்திருந்தது, புரட்டாசி மாத விரதத்தையொட்டி விலை மேலும் பூக்களின் உயரும் என விவசாயிகள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் இன்றைய சந்தையில் பூக்களின் விலை கடுமையாக சரிந்துள்ளதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.