தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த மீன் வெட்டும் தொழிலாளர்கள் ஜெரினா கணவர் கலில். இந்த தம்பதிக்கு இரண்டு பெண்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் மூவருக்கும் திருமணமாகி வெளியூாில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.  கலிலுக்கு மதுப்பழக்கம் அதிகரித்து வந்துள்ளது. இதனால் கணவனுக்கும் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டைகள் வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. தொடர்ந்து இருவரும் அடிக்கடி தகராறு ஏற்படுவது, சமாதானம் ஆவது என்பது தொடர் கதையாகவே இருந்துள்ளது.



 

இந்நிலையில் நேற்றிரவு அளவுக்கு அதிகமாக மது போதையில் இருந்துள்ளனர். அப்பொழுது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இரவு முழுவதும் பிரச்சினை தொடர்ந்து கடும் வாக்கு வாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில்  கலில் நேற்றிரவு சுமார் 2 மணி அளவில் மனைவியை குடும்பம் நடத்த அழைத்து, ஆடைகளை பலவந்தமாக கழட்டி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஜெரினா மறுத்ததால்,  குடிபோதையில் இருந்த கலில் ஆத்திரத்தில், அவருடைய மனைவி ஜெரினாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கழுத்து, மார்பு பகுதியில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த ஜெரினா, அரை நிர்வாணமாக மேலாடை இல்லாமல், சத்தமிட்டவாறு, தப்பித்து வீட்டிற்கு வெளியே வந்துள்ளாா். ஆனால் உடலில் கத்தி ஆழமாக பதிந்ததால், வீட்டிற்கு வெளியே இரத்த வெள்ளத்தில், கீழே விழுந்தார்.



 

ஜெரினாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினா் வந்து பார்த்தனர். அப்பொழுது ஜெரினா உடலில் படுகாயத்துடன், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வந்ததை கண்ட, கலில் அங்கு இருந்து தப்பி ஒடியுள்ளாா்.   தொடர்ந்து ஒகேனக்கல் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனா். இந்த தகவலறிந்து வந்த ஒகேனக்கல் காவல் துறையினர், ஜெரினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த, ஒகேனக்கல் காவல் துறையினர், தப்பி ஓடிய கொலையாளி கலிலை, காவிரி ஆற்று பகுதியில் கைது செய்தனர். தொடர்ந்து கலிலிடம்,  ஒகேனக்கல் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்  ஒகேனக்கல் பகுதியில், குடிபோதையில் இருந்த  கணவனே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.