தி.மு.க., பா.ஜ.க.வின்‌ அரசியல்‌ ஆதாய நாடகத்தைத்‌ தமிழக மக்கள்‌ ஏற்கமாட்டார்கள்‌ என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’கங்கை கொண்டான்‌, கடாரம்‌ வென்றான்‌ என்று பெயர்‌ பெற்ற, கடல்‌ கடந்து படை நடத்தி, இலங்கை முதல்‌ இந்தோனேசியா வரை தெற்காசியா முழுவதையும்‌ ஒரு குடையின்‌ கீழ்‌ ஆட்சி புரிந்த ஒப்பற்ற பேரரசன்‌, மாபெரும்‌ வெற்றிச்‌ சரித்திரத்தைத்‌ தன்‌ மார்பினில்‌ தாங்கியவன்‌ சோழப்‌ பேரரசின்‌ வெற்றிப்‌ பேரொளியாகத்‌ திகழ்ந்த ராஜேந்திர சோழன்‌.

வெற்றியின்‌ அடையாளம்

ராஜராஜ சோழனின்‌ மகனாகப்‌ பிறந்தாலும்‌ தந்தையையும்‌ தாண்டி வெற்றித்‌ தடம்‌ பதித்த தமிழ்ப்‌ பேரரசன்‌, தன்‌ வெற்றியின்‌ அடையாளமாக இருப்பதற்காக அமைத்த நகரம்தான்‌ கங்கைகொண்ட சோழபுரம்‌. ஆயிரம்‌ ஆண்டுகளாகத்‌ தமிழர்களின்‌ பெருமைக்குரிய அடையாளமாக நிமிர்ந்து நிற்கிற ஒரு நகரம்‌. கங்கைகொண்ட சோழபுரம்‌ கோவில்‌, யுனெஸ்கோவால்‌ உலகப்‌ பாரம்பரியச்‌ சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பெருஞ்சிறப்பு கொண்டது.

மாபெரும்‌ யானைப்‌ படை, கடற்படையைக்‌ கட்டமைத்திருந்த வீறுமிகுந்த சோழப்‌ பேரரசால்‌ அமைக்கப்பட்டு, இன்றளவும்‌ தமிழ்‌ மண்ணுக்கும்‌ தமிழகத்திற்கும்‌ தனிப்பெரும்‌ அடையாளமாக இருக்கும்‌ கங்கைகொண்ட சோழபுரத்திற்கு, தமிழையும்‌ தமிழ்நாட்டையும்‌ ஓரவஞ்சனையுடன்‌ ஒதுக்கும்‌ ஒன்றிய பா.ஐ.௧. அரசின்‌ பிரதமர்‌ வந்து, ராஜராஜ சோழனுக்கும்‌ ராஜேந்திர சோழனுக்கும்‌ சிலைகள்‌ அமைக்கப்படும்‌ என்று அறிவித்ததோடு சோழர்களின் பெருமை குறித்து நமக்குப்‌ பாடம்‌ எடுப்பது போலவும்‌ பேசிச்‌ சென்றுள்ளார்‌.

வெற்று விளம்பர மாடல்‌ தி.மு.க. அரசு

75 ஆண்டுகளைக்‌ கடந்த கட்சி என்றும்‌ தமிழ்‌, தமிழர்‌ அடையாளம்‌ என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும்‌ பொய்யாக மார்‌ தட்டிக்கொள்ளும்‌ தற்போதைய ஆளும்‌ கட்சியான தி.மு.க., தமிழர்‌ பெருமையான சோழப்‌ பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால்‌ இப்போது தமிழர்களுக்கு எதிராக இருக்கும்‌ ஒன்றிய பா.ஜ.க. அரசு இதைக்‌ கையில்‌ எடுத்திருக்காது. இதையெல்லாம்‌ செய்யாமல்‌, ஒன்றியப் பிரதமர்‌ வருகை தமிழ்நாட்டுக்குப்‌ பெருமை என்று வாஞ்சையாகச்‌ சொல்லிச்‌ சிலாகித்தது இந்த வெற்று விளம்பர மாடல்‌ தி.மு.க. அரசு.

சோழப்‌ பேரரசின்‌ பெருமையைக்‌ கொண்டாட வேண்டியது தங்கள்‌ கடமை என்பதை மறந்து, ஒன்றிய பா.ஐ.௧. கையில்‌ அடைக்கலம்‌ புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின்‌ பெருமையையும்‌ அடகு வைத்துள்ளது தி.மு.க. அரசு''.

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.