டிடிவி தினகரன் தனியார் மருத்துவமனையில் திடீர் அனுமதி...! தொண்டர்கள் அதிர்ச்சி..!

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் இன்று தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Continues below advertisement

அ.ம.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பு வகிப்பவர் டிடிவி தினகரன். இவர் தற்போது தஞ்சையில் உள்ளார். இந்த நிலையில், இன்று அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தினகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அ.ம.மு.க. தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் வேதனை அடைந்துள்ளனர். 

Continues below advertisement

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தினகரனுக்கு இரவில் சாப்பிட்ட உணவு சேரவில்லை என்பதால், அவர் காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தினகரன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனை முன்பு குவியத் தொடங்கினர்.

இந்த நிலையில், தனது உடல்நிலை குறித்து தினகரன் டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினகரனின் உடல்நலம் சீராக இருப்பதை அறிந்த பிறகு தொண்டர்கள் மருத்துவமனையில் இருந்து சென்றனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola