உறுப்பு தானம் செய்த 258 பேர் குடும்பம் கௌரவிப்பு


உறுப்பு தான தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் உறுப்பு தான கொடையாளர்களின் குடும்பத்திற்கும் , உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டி கௌரவித்தார்.


கடந்த 12 மாதங்களில் 258 உயிரிழந்தவர்கள் உறுப்பு தானம் செய்துள்ளனர். உறுப்பு தானம் செய்த 258 பேரது குடும்பத்தினரை மருத்துவத்துறை சார்பில் கௌரவிக்கப்படுகிறது.


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணி


48 அரசு மருத்துவமனையில் மூளை சாவு கமிட்டி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது , கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஸ்டான்லி , ராஜிவ்காந்தியை தொடர்ந்து நெல்லை, மதுரை, கோவை அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு 25 லட்சம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.


விடியல் எனும் தானியங்கி பதிவு செயலி தொடங்கப்பட்டுள்ளது , தானியங்கி செயலி மூலம் உடல் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்யலாம், கொடையாக பெறப்பட்ட உறுப்புகளை சரியான முறையில் சிகிச்சை அளித்து மற்றோர் உயிர் காப்பாற்றப்படுகிறது, மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து அரசு மருத்துவமனையிலும் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.


ஒடிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு கொடையாளர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படுகிறது, இந்திய அரசிடம் 8 வது முறையாக விருது தமிழ்நாடு பெற்று வருகிறது.


272 கொடையாளர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படுகிறது. 14,300 பேர் இணையத்தில் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளனர், தமிழ்நாட்டின் முதல்வர் மியாட் மருத்துவமனையில் தனது உறுப்பை தானமாக தர பதிவு செய்துள்ளார்.


1471 பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் பலனடைந்துள்ளனர், 7106 பேர் சிறுநீரகம் வேண்டி காத்திருக்கிறார்கள்.


பாம்பு கடி மருந்துகள் இருந்ததா ? அமைச்சர் கேள்வி


டெங்கு தமிழகத்தில் கட்டுக்குள் உள்ளது. 2012 - ல் 66 பேர் இறந்தனர். இந்த வருடம் 5 இறப்புகள் உள்ளன.


எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பாம்பு கடிக்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருந்ததா என்பதை அவரே ஆய்வு செய்யட்டும். மருந்து தட்டுப்பாடு தமிழ்நாட்டில் நிலவுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் போகிற போக்கில் குறை சொல்லக் கூடாது. அனைத்து மருத்துவமனைகளிலும் எதிர்க்கட்சித் தலைவரே சென்று ஆய்வு மேற்கொள்ளட்டும் என்று கூறினார்.