தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க திமுக கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.

Continues below advertisement

தேர்தல் வாக்குறுதி தயாரிப்பு குழு:

திமுக-வை வீழ்த்த அதிமுக கூட்டணி, நாம் தமிழர் ஒரு பக்கம் இருக்க புதிய எதிரியாக தவெக-வும் களத்தில் இறங்கியுள்ளது. இதனால், வரும் தேர்தலில் மக்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை எடுத்து வைக்க திமுக வியூகம் வகுத்துள்ளது. இதற்காக தேர்தல் வாக்குறுதிகள் அறிக்கை குழுவை திமுக அமைத்துள்ளது. 

கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 

Continues below advertisement

நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுநலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்க தலைமை கழகத்தில் அமைக்கப்பட்ட குழுவின் விவரம்:

1. கனிமொழி கருணாநிதி ( தலைமை)

2. டி.கே.எஸ். இளங்கோவன்

3. கோவி செழியன் 

4. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

5. டிஆர்பி ராஜா

6. எம்எம் அப்துல்லா

7. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

8. எழிலன் நாகநாதன்

9. கார்த்திகேய சிவசேனாபதி

10. தமிழரசி ரவிக்குமார்

11. சந்தானம்

12. சுரேஷ் சம்பந்தம்

ஆகியோரை தேர்தல் வாக்குறுதிகள் தயாரிப்பதற்கான குழுவாக அமைத்துள்ளனர்.

வாக்குறுதிகள் ஏன் அவசியம்?

சட்டமன்ற தேர்தலில் மக்களை கவர்வதற்கு தேர்தல் வாக்குறுதிகள் மிக மிக அவசியம் ஆகும். குறிப்பாக, கடந்த கால தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பஸ் பாஸ், சைக்கிள், ஒரு ரூபாய்க்கு ரேஷன் அரிசி, இலவச ரேஷன் அரிசி, கலர் டிவி, மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப் போன்ற கடந்த கால வாக்குறுதிகள் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? என்பதை தீர்மானித்த முக்கியமான வாக்குறுதிகள் ஆகும்.

தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் இடம்பெற்ற மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து பயணம் ஆகிய திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திட்டங்கள் ஆகும். இதுபோலவே, வரும் சட்டமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வாக்குறுதிகளை அளிக்க திமுக தயாராகி வருகிறது. 

காத்திருக்கும் சவால்:

வரும் தேர்தல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் சவாலை உண்டாக்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்த அதிமுக - பாஜக கூட்டணி தேமுதிக, பாமக என ஒவ்வொரு கட்சிக்கும் கூட்டணிக்கும் அழைப்பு விடுத்து வருகிறது. மறுபுறம்  தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் தவெக முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்குகளில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. 

இதனால், அனைத்து தலைமுறையினரின் வாக்குகளையும் கவரும் வகையில் புதிய வாக்குறுதியை மக்களுக்கு அளிக்க திமுக முடிவு செய்துள்து. இதனால், தேர்தல வாக்குறுதியில் கூடுதல் கவனம் செலுத்த மூத்த நிர்வாகிகளுக்கும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.