அ.தி.மு.க..,வின் கழக அமைப்பு செயலாளராக பதவி பெற்ற, முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே  உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து  செல்லூர் கே.ராஜூ பேட்டியளிக்கும் போது "அ.தி.மு.க.,வில் பதவி கேட்காமலேயே எடப்பாடி பழனிசாமி எனக்கு கழக அமைப்பு செயலாளராக பதவி வழங்கியுள்ளார்.






அ.தி.மு.க.வுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நான் விசுவாசமாக செயல்படுவேன். நம்மை நம்பி இருக்கும் தொண்டர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என அம்மா தெரிவித்துள்ளார்.



எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க பாடுபடுவேன். அ.தி.மு.க., தொண்டரின் புனித ஸ்தலமாக தலைமை அலுவலகம் விளங்குகிறது. அப்படிப்பட்ட இடத்தில் வன்முறை சம்பவம் நிகழ்ந்தது வருத்தமளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க., ஒன்றுபட்டு இருக்கிறது. அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைய வேண்டும். அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்ளவோம். ஓ.பி.எஸ் ஏட்டிக்கு போட்டியாக செயல்படுவதால் எந்தவொரு பயனும் இல்லை. யார் பக்கம் கட்சி இருக்கிறது என்பதை ஓ.பி.எஸ் புரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க.,வில் சாதி ரீதியாக பதவி வழங்குவதில்லை. அதிமுகவில் சாதி இல்லை, ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருத்தம் தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி பின்னால் யார் வேண்டுமானாலும் வரலாம். அ.தி.மு.க.,வை நம்பியவர்கள் கெட்டதில்லை.



அதிமுகவை நம்பாமல் கெட்டவர்கள் தான் உள்ளனர், ரவீந்திர நாத்தை நீக்கியதால் அ.தி.மு.க.,வுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கட்சியின் பலம் நிர்ணயம் செய்யப்படாது, தொண்டர்களின் பலமே அ.தி.மு.க" என கூறினார்.

 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண