நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனக்கு எதிராக விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீமான் வழக்கு:
கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரை 2012 ஆம் ஆண்டில் திரும்பி பெறுவதாக அவர் அளித்த கடிதத்தின் அடிப்படையில் இந்த புகாரை போலீசாரும் முடித்து வைத்தனர்.
இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மீது விஜயலட்சுமி புகாரை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த வழக்கானது நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிகே இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது அவர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஏழு முறை கரு கலைப்பு:
நடிகை விஜய லட்சுமிக்கு சீமான் மீது காதல் எல்லாம் இல்லை என்றும் பல்வேறு பிரச்சனைகள் காரணமாகத்தான் விஜயலட்சுமி குடும்பத்தினர் சீமானை அனுகி உள்ளனர். சீமான் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் உறவு வைத்துள்ளார். அதேபோல் விஜயலட்சுமியை சட்டப்படி திருமணம் செய்து கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார். சீமானின் வற்புறுத்தலால் விஜயலட்சுமி ஏழு முறை கரு கலைப்பும் விஜயலட்சுமி செய்திருக்கிறார். அதேபோல் அவரிடம் இருந்து பெரும் பண தொகையையும் சீமான் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி விஜயலட்சுமி ஏன் புகாரை திரும்ப பெற்றார் என்று கேள்வி எழுப்பினர், அரசியல் அழுத்தம் காரணமாக சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மன உளைச்சல் காராணமாகவே புகாரை திரும்ப பெற கடிதம் அனுப்பியதாக விஜயலட்சுமி கூறியுள்ளார்” என்று காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறைக்கு பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க அதிகாரம் உள்ளது. இதிலிருந்து மிரட்டல் காரணமாக தான், புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார் என்பது தெளிவாகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ரத்து செய்ய முடியாது:
மேலும், “ பாலியல் வன்கொடுமை புகார் மிகவும் தீவிரமானது என்பதால் அந்த புகாரை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது. சீமான் மீது விஜயலட்சுமி சொன்ன புகார் அவரது வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது. எனவே சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதி மன்றம் கூறிய நிலையில் சீமானுக்கு இது பெரும் தலைவலியாக மாறியுள்ளது.