அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்பி உதயகுமார் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆர் பி உதயகுமார் சந்தித்து வாழ்த்து பெற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்பொழுது பேசிய அவர், ”இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு சாமானிய தொண்டன். எனக்கு இந்த வரலாற்று வாய்ப்பினை வழங்கி இருக்கிறார். அவரது நம்பிக்கைக்கு உரியவனாகவும் தலைமைக்கும், கழகத்துக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது எவ்வாறு விசுவாசமாக பணியாற்றினோமோ அதேபோன்று பணியாற்றுவோம்.


சாமானிய தொண்டனும் முதல் வரிசையில் அமரலாம் என்பதை நிரூபித்து காட்டுவதற்கு எடுத்துக்காட்டாக சாட்சியாக இன்று நானும் இருக்கிறேன். உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கொள்கை நோக்கத்தோடு எனக்கு தெய்வ உள்ளத்தோடு இந்த வரலாற்று வாய்ப்பினை வழங்கி இருக்கிறார்கள்.


திமுகவின் நிர்வாக  குளறுபடிகளை தோல் உரித்து காட்டுகிற பணியினை கடந்த ஓராண்டு காலமாக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருகிறார். இனிவரும் காலங்களிலும் அவர் காட்டுகிற வழியில் பயணிக்க எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றியை வார்த்தையால் சொல்லாமல் வாழ்வில் வாழ்ந்து காட்டுவேன் என்று கூறினார்.


அதிமுகவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உயர்நிலையை அடைந்துள்ளார்கள் இன்று அதில் நானும் ஒருவனாக ஒரு சாட்சியாக இருக்கிறேன். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நியமனம் தொடர்பாக சட்டப்படி முறைப்படி சபாநாயகர் நடவடிக்கை நடக்கட்டும் “ என தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண