தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, கட்சி தலைவர்கள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழக தலைவர்களை தவிர, தேசிய தலைவர்களும் பிரச்சாரம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். முதலில், சென்னை வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மெளலானாவை ஆதரித்து இன்று காலை 11 மணிக்கு பிரச்சாரம் செய்கிறார்.


இதையடுத்து, சேலம் சீலநாயக்கன்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். மாலை 4 மணிக்கு நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.