தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு தேர்தல் நடைபெறும் அதே தினத்தில், புதுச்சேரி மாநிலத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், தி.மு.க. ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் போட்டியிடுகின்றனர். இதுதவிர, மக்கள் நீதிமய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர், பா.ம.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரம்மாண்ட பிரச்சார கூட்டம் 30-ந் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, அம்மாநில புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி., பாஜக பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:-