அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்ட ஓபிஎஸ் மனு மீதான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடந்து வருகிறது. அப்பொழுது, ஜுலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பொதுக்குழு நடத்தலாம் என்று உச்சன்நீதிமன்றம் கூறிய பிறகு உயர்நீதிமன்றம் என்ன உத்தரவிட முடியும்..? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 


அதற்கு ஓபிஎஸ் தரப்பில், அதிமுகவின் விதிகளின்படி பொதுக்குழு கூட்டவில்லை. எனவே, பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தலையிடலாம். ஜூலை 11 ம் தேதி பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் செல்லுமா என்பதுதான் இந்த வழக்கு. பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் கிடைத்தவுடன் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது. 


அனைத்து கூட்டங்களும் முறையாக நோட்டீஸ் அனுப்பி நடத்தப்படுகிறதா என்று ஓபிஎஸ் தரப்பிடம் நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, வழக்கு தொடர்வதற்கு ஒருநாள் முன்புதான் நோட்டீஸ் கிடைத்தது. 15 நாள்களுக்கு முன்பாகவே நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும். ஆனால், வழங்கப்படவில்லை என்று பதிலளித்தனர். 


தொடர்ந்து, கடந்த 23 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை தொடர்ந்துதான் வரும் 11 ம் தேதி பொதுக்குழு நடத்தபடுகிறதா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு, இல்லை, அவ்வாறு நடத்தப்படவில்லை. 23 ம் தேதி பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து இந்த 11 ம் தேதி பொதுக்குழு இல்லை. இபிஎஸ் தரப்பு கூறியதுபோன்று பத்திரிக்கையில் செய்தி வெளியானது என்பதை ஆதாரமாக எடுக்க முடியுமா என்று ஓபிஎஸ் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. 


தொடர்ச்சியாக ஓபிஎஸ் தரப்பில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படாமல் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ மட்டுமேதான் பொதுக்குழுவை கூட்டமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது. 


முன்னதாக, ஒ.பி.எஸ். தரப்பு வாதத்தில், ”ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு நடத்தப்படும் என அவைத்தலைவர் அறிவித்தது கட்சி விதிகளுக்கு முரணானது. 


கட்சி விதிகளின்படி பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட எந்த கூட்டங்களை கூட்டுவதாக இருந்தாலும் அதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அவசியம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தவிர வேறு எவருக்கும் பொதுக்குழுவை கூட்ட அதிகாரமில்லை.


இரு பதவிகளின் அதிகாரத்தை அவைத்தலைவரோ, தலைமைக் கழக நிர்வாகிகளோ பறித்துக் கொள்ள முடியாது. ஒற்றைத் தலைமை கொண்டு வரும் வகையில் ஜூலை 11ல் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர முயற்சி. அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 


 ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஜூன் 23ல் நடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தொடர்ந்து செயல்பட முடியாது எனக் கூறி, இரு பதவிகளின் அதிகாரத்தை தலைமைக் கழக நிர்வாகிகள் பறித்துக் கொள்ள முடியாது


ஜூன் 23 கூட்டத்தில் இரு பதவிகளுக்கும் ஒப்புதல் கோரி எந்த தீர்மானங்களும் இடம்பெறவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் ஜூலை 11ல் கூட்டப்படும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர