தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடியில் தி.மு.க.விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் தி.மு.க ஆட்சி நிச்சயமாக வரும். மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பதவி ஏற்பார். நிச்சயமாக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் கீதா ஜீவன் இந்த தேர்தலிலும் அவர் வெற்றி பெறுவார்.
செல்போன் கொடுப்பதாக கூறினார்கள். அதனை கொடுத்திருந்தால் கூட ஊரடங்கு காலத்தில் மாணவ - மாணவிகள் பயன்படுத்தி இருப்பார்கள். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது செய்யாமல் கடன் சுமையை மட்டும் ஏற்றி வைத்துள்ளனர். நிச்சயமாக மக்களுக்கு தரக்கூடிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மாட்டார்கள். மு.க.ஸ்டாலின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றித் தருவார். நிச்சயமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.