சென்னையில் உள்ள ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில், மூலக்கொத்தளத்தில் இன்று பரப்புரையில் ஈடுபட்ட பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறும்போது,


''தி.மு.க.வுக்கு எதிராகத் திரும்பியிருப்பதால்தான் உடனடியாகத் தன் பேச்சுக்காக .ராசா மன்னிப்பு கேட்கிறார். அவர்கள் கட்சியில் எல்லோரும் அப்படித்தான். நிலச்சுவான்தாரர், பண்ணையார், ஜமீன்தார் போன்றுதான் அவர்கள் அரசியல் நடத்துகின்றனர். மக்கள் அரசியலை தி.மு.கசெய்யவில்லை.




ராதாரவிக்கு ஒரு நியாயம், .ராசாவுக்கு ஒரு நியாயமா.ராசா மீது நடவடிக்கை எடுத்தால்தான் தி.மு.கமீது மக்களுக்கு நல்ல கருத்து இருக்கும்.ராசா மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால்தி.மு.கசொல்லித்தான் .ராசா பேசினார் என்ற கருத்து இருக்கும்தான் பேசியதைத் திரித்து சமூக வலைதளங்களில் உலாவிட்டிருந்தால் .ராசா மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லையே? அப்போது பேசியது உண்மைதானே”


இவ்வாறு அவர் கூறினார்.  நடிகர் ராதாரவி நடிகை நயன்தாரா குறித்து பேசிய கருத்து, சர்ச்சைக்கு உள்ளாகியதை தொடர்ந்து அவர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். பின்னர், அவர் பா.ஜ.க.வில் இணைந்துவிட்டார்.