விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையம் வந்தடைந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறுகையில், டீசல், பெட்ரோல் போடுவதிலேயே கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளார்கள். அரசாங்கம் போக்குவரத்து மானியம் கொடுத்து அதை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதலமைச்சரின் செய்ய வேண்டிய வேலை. அதனால் போக்குவரத்து கழகம் பாதிக்கப்படுகிறது.

ஓரணியில் தமிழ்நாடு 

தமிழ்நாடு இங்கே தான் இருக்கிறது. அதில் எதற்கு ஓரணியில் பயணம் செய்ய வேண்டும் என தெரியவில்லை. இன்னைக்கு முதலமைச்சரை பொருத்தமட்டில் எப்போது அதிமுக கூட்டணி அமைந்தது அப்போது இருந்தே அவருக்கு ஜுரம் வந்துவிட்டது. தோல்வி பயம் வந்துவிட்டது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அதே மாதிரி தான் பேசுவார்கள். அம்பாசமுத்திரத்தில் ஒரு 17 வயது சிறுமியை போதை பழக்கமுடையவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். வள்ளியூரில் ஒரு மூதாட்டி 17 சவரன் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார். தினசரி இது போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள்கள் நடமாட்டம் உள்ளது. இதை மறைப்பதற்காக முதல்வர் ஓரணியில் தமிழ்நாடு என்கிற பெயரில் ஊர் ஊராக செல்கிறார். இதனால் எந்த நன்மையும் இல்லை. இன்று வெகுஜனம் விரோத ஆட்சியாக உள்ளது நிச்சயமாக 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். 

பாஜகவின் டம்மி வாய்ஸ் தான் எடப்பாடி என முதல்வர் கூறியது குறித்த கேள்வி

முதலமைச்சருக்கு இப்போது என்ன பேசுவது என்று தெரியவில்லை. முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் பேச வேண்டிய கருத்தைதான் பேசியிருக்கிறார். கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம், டம்மி வாய்ஸாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

சாத்தூரில் நடந்த மதிமுக  கூட்டத்தில்  செய்தியாளர் தாக்கப்பட்டது குறித்து 

அண்ணன் வைகோ அவர்கள் எப்போதும் அதிகம் கோபப்படக் கூடியவர். கூட்டத்தில் இருக்கும்போது சத்தம் போடுவது எல்லா இடங்களிலும் செய்கிறார். பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டு இருக்கிறார், உண்மையில் அது கண்டிக்கத்தக்கது, வருந்தத்தக்கது.

மதுரை மாநகராட்சி  தலைவர்கள் ஊழல் குறித்த கேள்வி

இதற்கு பதில் அளித்த பாஜக மூத்த தலைவர் ராம சீனிவாசன் கூறுகையில்: மதுரை மாநகராட்சி மேயரை மாற்றுவார்கள் என யூகம் உள்ளது. நாளை மறுநாள் பாஜக சார்பாக மூன்று மாவட்டங்கள் இணைந்து பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் திமுக பதவி விலக வேண்டும் என்று நடைபெற உள்ளது.

சங்கிகள் கூட்டம் பாஜக - சேகர் பாபு பேச்சு 

மாநாடு நடைபெறுவதற்கு முன்னால் ஆறு நாட்கள் இரண்டரை லட்சம் பேர் வந்திருந்தார்கள். ஆறாம் நாள் 5 லட்சம் பேர் வந்தனர். அவர்கள் கட்சிக் கூட்டம் நடத்தினால் டாஸ்மாக்கில் தான் அதிக கூட்டம் இருக்கும். ஆனால் இந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் கூட்டம் முடிந்தவுடன் அமைதியாக அமர்ந்திருந்த சேரை எடுத்து அடுக்கி வைத்துவிட்டு கீழே கிடந்த பாட்டிலை சுத்தம் செய்து சென்றார்கள். இதுதான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு. திருச்செந்தூரில் நடைபெற்ற கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம். தனிமனிதனாக சேகர்பாபு சொல்கிறார் என்றால் பொறுப்பேற்க முடியாது.