கரூர் சம்பவத்தில் 41 பேர் தவெக பரப்புரையில் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
நடந்தது என்ன?
இதையடுத்து, தவெக-வின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, உண்மையை பதிவு செய்ய வேண்டும். காவல்துறை பெரிதாக சப்போர்ட் செய்யவில்லை. ஆனால், எப்போதும் இல்லாத அளவில் நாமக்கல் மக்கள் ஆதரவுடன் முடித்துவிட்டு கரூரில் காவல்துறை என்ன நேரம் சொன்னார்களோ, விஜய் பிரச்சாரமாகட்டும் எங்க சொந்த லைவ் அனைத்து சேனல்களுக்கும் லைவ் அளித்தோம்.
அது ஏன் சொல்கிறேன் என்றால் தலைவர் தாமதமாக வந்தார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டு பரப்பப்படுகிறது. 3-10 என்ன காவல்துறை சொன்ன நேரத்தில்தான் போனோம். நாங்கள் 16 நாட்கள் பேசாம இருக்கிறோம். உண்மையை பேச வேண்டும்.
காவல்துறை வரவேற்றது ஏன்?
கரூரில் காவல்துறைதான் எங்களை வரவேற்றனர். இது எந்த மாவட்டத்திலும் நடக்கவில்லை. அவர்கள்தான் திட்டமிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்த வேண்டும் என்று சொன்னார்கள். தலைவரும் எல்லாம் வசதியா? என்று கேட்டுவிட்டு மேலே வந்தார். ஏன் காவல்துறை கரூர் மாவட்ட எல்லையில் வரவேற்கனும்?
பேச ஆரம்பிக்கும்போது மக்களைப் பார்த்துதான் பேசினார். ஆம்புலன்ஸ்க்கு வழிவிடனுமோ அங்கேயே வழிவிடச் சொன்னார். தண்ணி கேட்கும்போது அவரே கொடுத்தார். அவரைப் பொறுத்தவரை எந்த பிரச்சினையும் நிலவில்லை என்று மக்களைப் பார்த்து எவ்வளவு ஷார்ட்டாக முடிக்க முடியுமோ முடித்தார்.
நாங்கள் ஓடவில்லை:
இந்த இடத்தை எந்தளவு அழுத்தம் கொடுத்து தவெக-விற்கு கொடுத்தார்கள் என்று ஆதாரத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொடுக்கிறோம். தமிழக அரசு மீதும், தமிழக அரசின் விசாரணை மீதும் எங்களுக்கு ஏன் நம்பிக்கை இல்லை என்றால், நாங்கள் ஓடவில்லை.
கரூர் எல்லையில் நான், பொதுச்செயலாளர், அருண்ராஜ் உள்ளிட்டோர் காத்துக்கொண்டிருந்தோம். காவல்துறையினர் வரவேண்டாம், வந்தால் கலவரம் ஏற்படும் என்று எச்சரித்தனர். அதையும் தாக்கல் செய்துள்ளோம். ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்களையும், ஒட்டுமொத்த கட்சியையும் தடியடி நடத்தி தீவிரவாதி மீது நடத்தியதையும் நாங்கள் பதிவு பண்ணோம்.
நாங்களும் மனிதர்கள்:
நாங்கள் அந்த இறப்பு ஏற்பட்ட உடனே, நாங்கள் மனிதர்கள். இறப்பு ஏற்பட்ட உடன் முதல் 4 நாட்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனிதாபிமனம் எங்களுக்கு உள்ளது. என் வீட்டில் யாராவது இறந்தால் நான் மீடியா முன்பு வந்து பேசிக்கொண்டே இருக்க மாட்டோம்.
இந்த சந்தர்ப்பத்தை திமுக பயன்படுத்தி என்ன நாடகம் ஆடினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மக்களுக்குத் தெரியும். அந்த நாடகத்துடன் சட்டரீதியாக போராடக்கூடாது என்று அந்த வாரம் நீதிமன்றம் விடுமுறை. மிகப்பெரிய திட்டமிடல். பேட்டி கொடுத்தால் யூ டியூபர்ஸ் கைது செய்யப்பட்டனர். உண்மை ஒருபக்கம் மட்டும்தான் தெரியனும். தவெக மீது எப்படி பொய்குற்றச்சாட்டு சொல்லலாம்னு செய்தார்கள்.
எங்கள் மாவட்டச் செயலாளர்கள் கைது செய்யப்பட்டனர். எங்கள் தலைவர் கொடுத்த அறிவுறுத்தல். ஒட்டுமொத்த கட்சியையும் முடக்கும் செயலை திமுக அரசு செய்ய முயற்சித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.