தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கப்பியறை பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆன்சிஷோபாராணி என்ற நாம் தமிழர் வேட்பாளர் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்களை  பின்னுக்குத்தள்ளி வெற்றி பெற்றுள்ளார்.