புதுச்சேரி:- சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசியது தொடர்பாக அறிக்கை கொடுத்தால் நன்றாக இருக்கும்  என நடிகை ரோஜா பேட்டியளித்துள்ளார். புதுச்சேரி திருக்காஞ்சி புஷ்கரணி விழாவில் நடக்கும் கங்கா ஆர்த்தி நிகழ்ச்சியில், ஆந்திரா சுற்றுலா அமைச்சரும்  நடிகையுமான ரோஜா தற்போது பங்கேற்றுள்ளார், இந்நிகழ்வில் புதுச்சேரி சட்டபேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், சந்திரபிரியங்கா  ஆகியோரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... ரஜினி அரசியல் வேண்டாம் என முடிவு செய்த பின்னர் என்.டி.ஆர் விழாவில் சந்திரபாபு நாயுடு குறித்து தெரியாமல் பேசி உள்ளார். ஆந்திராவில் உள்ளவர்கள் ரஜினியை சூப்பர் ஸ்டாராகவும், நல்ல நடிகராகவும் நினைத்தனர், மேல் லோகத்தில் இருந்து சந்திரபாபுவுக்கு, என்.டிமார் ஆசீர்வாதம் செய்வார் என ரஜினி பேசியது  என்.டி.ஆர் ரசிகர்கள் கோபமாக உள்ளனர்.


ஆந்திர அரசியல் தெரியாமல் சந்திரபாபு நாயுடு கொடுத்த ஸ்கிரிப்டை படிப்பது சரியானதாக இருக்காது, ரஜினி பேசிய விவகாரத்தில் இன்று ஜீரோ ஆனது கஷ்டமாக உள்ளது. தான் உண்டு, வேலை உண்டு என்று இருக்க வேண்டும். சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினி பேசியது தொடர்பாக அறிக்கை கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆந்திர மக்களுக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு அரசு உறுதுணையாக உள்ளது, ஆந்திராவில் 2024-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவார் என ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண