மணிப்பூர் சம்பவத்தை இந்தியாவே உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. அதற்கு இந்தியா கூட்டணி பார்த்துக் கொள்ளும் என தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்தார்.


 


 




கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள காகிதபுரம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஆலை உலக அளவில்  அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பேப்பர் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இதனை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா டிஎன்பிஎல் அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர்  பேப்பர் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை  அமைச்சர் டி ஆர் பி ராஜா பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். முன்னதாக அலுவலகத்தில்  காகித நிறுவனம் குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது. காகித ஆலை அதிகாரிகள் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


 




 


பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய அமைச்சர், “உலக அளவில் மிகப்பெரிய நிறுவனமாக தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதனை விரிவுபடுத்தும் விதமாக புதிய திட்டங்களை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த இந்த ஆலையில் கழிவு நீர் கழிவுநீர் வெளியேற்றப்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை, சுற்றுச்சூழல் சார்பில் பார்வையிட்டு வருகின்றனர்.


 


 




மணிப்பூர் கலவரம் வரலாற்றில் மிகக் கொடூரமான சம்பவம் இதற்கு ஒன்றிய அரசு நிச்சயமாக கடுமையான நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்க வேண்டும். இதுவரை யாரும் பார்த்திராத கோர சம்பவம் நடைபெற்றுள்ளது‌. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது போன்று 50 சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதற்கு எல்லாம் இந்தியா பதில் சொல்லும் என்று தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.