அதிமுகவின் பொதுச்செயலாளர்  எடப்பாடியார் மீது பொய் வழக்கு பதிவு செய்த விடியா திமுக ஆட்சியில்   செயல்படும் காவல்துறையை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் திருவண்ணாமலை அறிவாளி பூங்கா அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக  முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ கலந்துகொண்டு கண்டண உரை எழுப்பினார். 


 




அப்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்: 


”விடியா திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு மட்டுமல்ல முன்னாள் முதல்வருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத ஒரு செயலிழந்த துறையாக காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு  இணையாக செயல்பட்டது. மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் முன்னாள் முதல்வர் மீது இந்த பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு போடப்பட்டதற்கு காரணம் தமிழக முதல்வர், இதற்கு தூண்டுதலாக இருந்தவரும் முதல்வர்  என்றும், தற்போது திமுக ஆட்சியில் தமிழக காவல்துறை ஸ்டாலின் சொல்லும் நபர்கள் மீதும், அதிமுக மீதும் வழக்கு போடும் ஏவல் துறையாக செயல்படுகிறது” என்றார். அதிமுக மீது ஒரு வழக்கு அல்ல ஒரு கோடி வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொள்ள எங்களாலும் எங்கள் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியாலும் முடியும் என்றார்.




 


 


”அதிமுக இயக்கம் கருணாநிதியை பார்த்துள்ளது, அப்போது கருணாநிதியால் புரட்சி தலைவி மீது வழக்கு போடப்பட்டது. அத்தனை வழக்குகளும் நீதி மன்றங்கள் மூலமாக சந்தித்தவர்கள் அதிமுக கட்சியினர்.  தொடர்ந்து இந்த இயக்கத்தின் மீதும், தொண்டர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து இந்த இயக்கத்தை முடக்கி விடலாம், அழித்துவிடலாம் என்றும் பகல் கனவு கண்டு வருகிறார்.  அதிமுக என்ற இயக்கம் புரட்சித் தலைவர் எம்ஜிஆரால்  உருவாக்கப்பட்டு பல்வேறு சோதனைகளை கடந்தும் வழக்குகளை கடந்தும் தமிழகத்தில் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்த இயக்கம் , இந்த இயக்கத்தை அழிக்க யார் நினைத்தாலும் சரி 




 


அதிமுக இயக்கத்தின் தலைமை பொறுப்பை ஏற்று தமிழகம் முழுவது சுற்று பயணம் மேற்கொண்டுள்ள  எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக கட்சியினரால் ஏதாவது ஏற்பட்டால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அதிமுக தொண்டர்கள் உட்பட நாங்கள் அனைவரும்  தற்கொலை படையாக மாறுவோம், மனித வெடிகுண்டாக மாறுவதற்கு கூட நாங்கள் தயங்க மாட்டோம் எனவும் எடப்பாடி பழனிச்சாமிக்காக எங்களுடைய உயிரை தியாகம் செய்ய தயாராக இருக்கிறோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுகிறேன். திமுக ஆட்சி பொறுப்பேற்று மக்களுக்கான எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மாறாக முன்னாள் அமைச்சர்கள் மீதும் கழகத்தின் பொதுச் செயலாளர் மீதும் வழக்கு பதிவு செய்து  செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம் இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என பேசினார்.