தந்தை - மகன் மோதல் உச்சத்தை எட்டிய நிலையில், பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்கி அதிரடியாக அறிவித்துள்ளார். அந்த கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ். வரும் 2026 தேர்தலை மனதில் கொண்டே இந்த முடிவை தான் எடுப்பதாகவும், இனி கட்சிக்கு நானே தலைவர் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
செயல் தலைவரானார் அன்புமணி
அன்புமணியை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்தலைவராக நியமிப்பதாகவும், இனி அன்புமணி அந்த பதவியிலே இருப்பார் என்றும் ராமதாஸ் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த பாமக பொதுக்குழுவில் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையே இளைஞர் அணி நியமனம் தொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டது. அதில், நான் சொல்வதைதான் கேட்கவேண்டும், இது என் கட்சி என்று ராமதாஸ் அறிவித்தார். அதன்பிற்கு இருவருக்கும் இடையே கடுமையான முறையில் கருத்து மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த திடீர் முடிவை அறிவித்துள்ளார்