சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழா மாநாட்டுப் பணிகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் , தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் , விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா  உள்ளிட்டோர் ஆய்வு செய்தப் பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் ராட்சத பலூனை பறக்கவிட்டு மாநாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.


அதனைத் தொடர்ந்து மாநாடு ஏற்பாடு பணி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் ;


செப்டம்பர் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 நந்தனம் YMCA மைதானத்தில்  திராவிட முன்னேற்ற கழகத்தின் முப்பெரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி தொடங்கி 75 ஆண்டுகள் ஆகியிருக்கின்றது. அதனை ஒட்டி பவள விழாவும் நடைபெறுகிறது.


திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய 75 ஆண்டுகள் நிறைவடை செய்ய ஒட்டி பவளவிழாவும் முப்பெரும் விழாவும் இணைந்து மாபெரும் விழா நடத்தப்பட உள்ளது.


இதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகளை விட  வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள விழாவில் ஒரு லட்சம் கலந்துகொள்ளக் கூடிய வகையில்   மாநாடு அமைக்கப்பட்டுள்ளது.


கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு இது முழுக்க முழுக்க திமுகவின் முப்பெரும் விழா அனைத்து கட்சி நிகழ்ச்சி அல்ல  என்று பதில் அளித்தார்.


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு  மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்தது தொடர்பான கேள்விக்கு ?


அதிமுக பங்கேற்பது நல்லது தான், நல்ல விஷயத்திற்கு சேர்ந்தால் நல்லது தான் , அரசும் மது ஒழிப்பிற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.


விடுதலை சிறுத்தைகள் அழைத்து அதிமுக சென்றால் நல்லது தானே , நல்ல விஷயத்திற்காக ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்று அர்த்தம் தானே , மதுவிலக்கு விஷயங்களில் அரசே விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது,


2017 முரசொலி பவள விழாவில் இதே மைதானத்தில் தான் கூட்டணி உருவாகியது , 2017 இல் இருந்து 2024 வரை  கூட்டணியில் எந்தவித பிசிறும் ஏற்படாமல்  தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்  ஒருங்கிணைத்து வருகிறார்.