DMK Election : திமுக தலைவர் பதவிக்கு, இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

திமுக தலைவர் பதவிக்கு போட்டியிட மு.க.ஸ்டாலின் பெயரில் நிர்வாகிகள் விருப்பமனுத் தாக்கல் செய்து வருகின்றனர்.

Continues below advertisement

கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தி.மு.க. சந்தித்த முதல் சட்டசபைத் தேர்தலிலே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

Continues below advertisement

இந்த பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவி மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியிடுகின்றனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இவர்கள் பொதுக்குழுவில் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நிலையில், தி.மு.க. தலைவர் பதவிக்கு வரும் அக்டோபர் 7-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன்படி, இன்று தலைவர் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகள் மற்றும் நிர்வாகிகள் தேர்வுக்கு காலை 10 மணி முதல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு தி.மு.க. நிர்வாகிகள் பலரும் குவிந்தனர். அவர்கள் அனைவரும் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தனர். இன்று மாலை 5 மணி வரை வேட்புமனுத்தாக்கல் நடைபெற உள்ளது. இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் சிறிது நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும்,. வரும் 9-ந் தேதி நடைபெற உள்ள தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய துணைப் பொதுச்செயாலளராக மக்களவை உறுப்பினர் கனிமொழி நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சுப்புலட்சுமி ஜெகதீசன் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகியதுடனும், அரசியலில் இருந்தும் ஓய்வு பெறுவதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். இதனால், அவரது பதவியிடம் மற்றொரு பெண் நிர்வாகிக்கு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் கனிமொழி துணைப்பொதுச்செயலாளராக தேர்வாக உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

வழக்கமாக, தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தான் நடைபெறும். ஆனால், இந்த முறை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாக மைதானத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க : தமிழர்களிடையே வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தந்த இந்திய அரசின் செயல்...அன்புமணி ராமதாஸ் காட்டம்

மேலும் படிக்க : அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் 100% ஒன்றிணைப்பதற்கு வாய்ப்பே இல்லை - இபிஎஸ்

Continues below advertisement