தமிழ்நாட்டில் மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


சமீபத்தில், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, அழகாபுரம் தொகுதி மோகன்ராஜ், மக்கள் நீதி மய்யம் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு, அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், கடலூர் குறிஞ்சிப்பாடி தொகுதியின் திமுக வேட்பாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர், சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.