பாஜகவுடன் யார் சென்றாலும் அவர்களை எதிர்க்கிற கூட்டணியில் தான் சிபிஎம் கட்சி இருக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ள கருத்து அரசியல் களத்தில் அனலை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதையும் கலைஞர் நூற்றாண்டு நாணயத்தை வெளியிட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்ததையும் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் மாநில செயலாளரே இதுபோன்ற ஒரு கருத்தை தெரிவித்தூள்ளது அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது


திருவாரூரில் பேட்டி அளித்த பாலகிருஷ்ணன்


திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, திமுக கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை ஆளுநர் மீது கடுமையான எதிர்ப்பில் உள்ளோம். திமுகவும் ஆளுநர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்கள். ஆளுநர் விருந்தில் திமுக பங்கேற்றது குறித்து அரசுதான் பதில் சொல்ல வேண்டும். எங்களைப் பொறுத்த அளவு திமுக ஆளுநர் விருந்தில் பங்கேற்காது என்று தான் எங்களிடம் கூறினார்கள். அரசும் ஆளுநரும் தொடர்ந்து முரண்பாட்டுடன் இருக்க வேண்டாம் என்பதற்காக விருந்தில் கலந்து கொண்டதாக கூறுகிறார்கள். என்னதான் விருந்திற்கு சென்றாலும் ராஜ்நாத் சிங்கை அழைத்தாலும் அடிப்படையில் அரசியல் மாற்றம் ஏற்படாது பாஜக தன்னை மாற்றிக் கொள்ளும் என்பதில் எந்த வழியும் இல்லை.


கலைஞர் நூற்றாண்டு நாணய வெளியீடு தொடர்பாக கருத்து


நாணயத்தை வெளியிட வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசு கேட்டதற்கு உடனடியாக ஒத்துக் கொண்டார்கள் அதே நேரத்தில் தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுக்க மறுக்கிறது. மத்திய அரசு பொருத்தவரை தமிழக அரசையும் தமிழக மக்களையும் புறந்தள்ளுகிற போக்கில் எந்த மாற்றமும் இல்லை.


பாஜகவோடு திமுக இணக்கமாக செல்ல முடியாது


பாஜகவுடன் இணக்கமாக செல்லும் முடிவை திமுக எடுக்க முடியாது. அவர்கள் எடுப்பதற்கான சூழலும் இல்லை. பாஜகவை எதிர்ப்பது என்கிற ஒரு விஷயத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத மதவெறி அரசியலை எதிர்கின்ற அடிப்படையில் இந்த கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கின்றோம். திமுக அரசு செய்யக்கூடிய நல்ல விஷயங்களை ஆதரிக்கின்றோம் மக்கள் விரோத போக்கை கடுமையாக எதிர்க்கிறோம்.


சென்னை மாநகராட்சிக்கு எதிராக சிபிஎம் போராட்டம்


வருகிற 28 ஆம் தேதி சொத்து வரி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வெளியிறுத்தி சென்னை மாநகராட்சி எதற்கு சிபிஎம் கட்சி சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம்.


பாஜகவோடு யார் சென்றாலும்…


பாஜகவுடன் யார் சென்றாலும் அவர்களை எதிர்க்கிற கூட்டணியில் தான் சிபிஎம் கட்சி இருக்கும் என்று தெரிவித்துள்ள கே பாலகிருஷ்ணன், விஜய் என்ன கொள்கையை பின்பற்றப் போகிறார் என்பது தெரியாமல் அவரைப் பற்றி எதுவும் கூற முடியாது. இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி இருப்பதால் நாணயத்தில் ஹிந்தி இடம் பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  அதே நேரத்தில் தமிழ் வெல்லும் என்ற வாக்கியமும் உள்ளது ஆகையால் இதில் எந்த பிரச்சினையும் இல்லை. இபிஎஸ் ஓபிஎஸ் சசிகலா மூன்று பேரும் சேருவதற்கான வாய்ப்பு இல்லை. மூன்று பேரும் மூன்று கோணத்தில் உள்ளார்கள். அதிமுக குறித்து மக்கள் மத்தியில் வீரியம் குறைந்துவிட்டது என்று தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.