தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. 173 தொகுதிகளில் நேரடியாக  போட்டியிடுகிறது. பிற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, கடந்த வாரம் தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் வெளியானது. 


 





அதில், சேலம் ஆத்தூர்(தனி) தொகுதியில் வேட்பாளராக ஜீவா ஸ்டாலின் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று தி.மு.க. தலைமை கழகம் பிறப்பித்த உத்தரவில் சேலம் ஆத்தூர்( தனி) தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஜீவா ஸ்டாலின் என்பவருக்கு பதிலாக கு.சின்னத்துரை என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கு.சின்னத்துரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.