கரூர் பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர்  20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 




 


நெய்வேலி என்எல்சி- விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து கரூர் பேருந்து நிலையம்  காமராஜ் சிலை அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 


 




 


நெய்வேலியில்  அன்புமணி ராமதாஸ் என்எல்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிட  சென்ற போது வன்முறை ஏற்பட்டது.  இதன் காரணமாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர்  கைது செய்யப்பட்டனர். 


 




 


அன்புமணி ராமதாஸ் கைதுக்கு கண்டனம் தெரிவித்து,  கரூர் பேரூந்து நிலையத்தில் இருந்து கண்டன முழக்கமிட்டவாறு காமராஜர் சிலை அருகே சென்ற பாட்டாளி மக்கள் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகளுர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாநகர செயலாளர் ராக்கி முருகேஷ் உள்ளிட்ட பாமக கட்சியினர் என்எல்சிக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண