அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ’தர்மத்தின் பாதையிலேயே பயணிப்போம்’  என அறிக்கை விட்டுள்ளார். இந்நிலையில் தர்மயுத்தம் 2.o அதிமுகவில் நடைபெற வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. 


அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி. கே. பழனிச்சாமி, பொறுப்பேற்றவுடனேயே ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கினார். தற்போது அவரது மகனும், அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினருமான ரவிந்திரநாத் உள்ளிட்ட 18 பேர் கட்சியியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து  நீக்கப்படுவதாக  அறிவித்தார்.  


தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்களின் அடிப்படையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரட்டைத் தலைமை முறை ரத்து செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வகித்த வந்த நிரந்தரப் பொதுச்செயலாளர் என்ற விதி ரத்து செய்யப்பட்டது.  இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவிக்கு நான்கு மாதத்தில் தேர்தல் நடத்தவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வத்தை நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றினார். 


இந்நிலையில், அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களான ஓபிஎஸ் மகன்களான தேனி பாராளுமன்ற எம்.பி ரவீந்தரநாத், ஜெய்பிரதீப், வெல்லமண்டி நடராஜன்,  முன்னாள் அம்மா நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், ஓபிஎஸின் தீவிர ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டுள்ளனர். மேலும், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து ஜெயலலிதா ஆதரவாளராக இருந்த அஞ்சுலட்சுமி, சைதை எம்.எம். பாபு, கோவை செல்வராஜ், வெங்கட்ராமன், கோபாலக்கிருஷ்ணன், எஸ். எ. அசோகன், ஓம்சக்தி சேகர்  என மொத்தம் 18 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்தார்.  


இந்நிலையில், ஓபிஎஸின் மகன் ஜெய பிரதீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


அரசியல் களத்தில் உண்மையாகவும் மனச்சாட்சியின்படி, யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமலும், நேர்மையாக மக்க்ள பணி செய்து, யாருடைய முன்னேற்றத்திற்காக, சுதந்திரத்திற்காக, உடல் வருத்தி போராடுகிறோமோ, அவர்களாலே கேலியும், கிண்டலும், தூரோகமும், சூழ்ச்சியும், விமர்சனத்தியும் எதிர்கொள்ளும் போது, என்னதான் அரசியல் பயணத்தில் மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது.


2001ல் கழக உறுப்பினராக பொறுப்பேற்றதில் இருந்து பொது வெளியில் கழக சொந்தங்களை விமர்சிக்கக் கூடாது என்ற கொள்கை முடிவு எடுத்ததினால் அமைதியாக இருக்கிறேன். எந்தவித சோதனைகளைச் சந்தித்தாலும்  புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு, காலத்தால் நல்ல தீர்ப்பு வரும் வரை கழக சொந்தங்கள் உணரும் வரை, இறைவனின் துணையோடு தர்மத்தின் பாதையில் பயணிப்போம் என குறிப்பிட்டுள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண