தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கு அவருக்கு கட்சியின் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் மாவட்டத்திற்கு சென்றார்.


முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது  அண்ணாமலை பேசியது, "ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக வின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.  அங்கு நிற்க கூடிய வேட்பாளர் பண பலம் , படைபலம் ஆகியவற்றை எதிர்க்கும் வகையில் ஒரே ஒரு வேட்பாளர் நிற்க வேண்டும். அந்த வேட்பாளரின் பின்னால் அனைவரும் நிற்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு. பா.ஜ.க. வின் நிலைப்பாடு ஆகும். குறிப்பாக நிற்ககூடிய ஒரு வேட்பாளரை  வெற்றிபெற எல்லா வகையான அஸ்திரங்களையும் கொடுக்க வேண்டியது கூட்டணியின் கடமை என்றார்.  திமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்பது பலம் வாய்ந்த கட்சியாகவும் , மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்ற வேட்பாளராகவும் இருப்பது அவசியம். கூட்டணி தர்மம் காக்கப்பட வேண்டும். நம் கூட்டணியில் பெரிய கட்சி என்பது அ.தி.மு.க. தான்.




மேலும் திமுக இடைத்தேர்தலில் பணம் அதிகம் செலவு செய்வார்கள். தி.மு.க தேர்தல் குழுவில் பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். அதிலேயே பணம் எந்தளவிற்கு செலவு செய்யப்படும் என்பது தெரிகிறது. எனவே இவைற்றையெல்லாம் எதிர்த்து களம் காண பலம் வாய்ந்தவர்  வேட்பாளராக இருக்க வேண்டும். எந்தவித குழப்பமும் இல்லை எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அ.தி.மு.க.


ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஏற்கனவே அமைச்சரான பலர் அந்த கட்சியில் இருக்கிறார்கள் என்றார். குறிப்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பின்னால் அவர் கட்சியின் மாவட்ட தலைவரே நிற்பாரா? என்பது சந்தேகம் தான். ஈ.வி.கே.எஸ் அவர்கள் மற்ற கட்சிகளை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றார்.


இதனை தொடர்ந்து பேசிய அவர்...  திருச்செந்தூர் கோவில் 5309 மாடுகள் காணோம் 1302 கோடி கணக்கு வழக்கில் குறைகள் உள்ளது. 15 லட்சம் லட்சம் பில்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறது. இது இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இதுவரை கூறவில்லை. நான் கேட்கும் கேள்விக்கு ஆதாரப்பூர்வமாக பதில் இல்லை. ஒரு திருக்கோயிலின் உண்டியலில் பொதுமக்கள் செலுத்தும் காணிக்கை அந்த கோயிலின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது தவிர கோயில் நிர்வாகத்தில் பணிபுரியக்கூடிய அதிகாரிகள் பஜ்ஜி, போண்டா, மிச்சர் போன்ற உணவு வகைகள் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.