கரூரில் கைகோர்த்த அதிமுக மற்றும் அமமுக?  ஓபிஎஸ் அணி மற்றும் அமமுக இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக மாநகர் முழுவதும் ஒரு சேர பறக்கும் அதிமுக மற்றும் அமமுக கொடிகள்.

 

 

கரூர் மாவட்ட அதிமுக எதிர்ப்பை மீறி ஆர்ப்பாட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் இடம்பெற்ற அதிமுக கட்சி பெயர் மற்றும் சின்னம். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரபடுத்த வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் மாநகரில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. நீதிமன்ற உத்தரவை மீறி அதிமுக பெயர் மற்றும் கட்சியின் சின்னங்கள் பயன்படுத்தப்படுவதாக கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. 

 

 

மாவட்ட அதிமுக எதிர்ப்பை மீறி ஆர்பாட்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில் அதிமுகவின் சின்னம் மற்றும் கட்சியின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சி கொடியை கையில் பிடித்தபடி கலந்து கொண்டுள்ளனர். கரூர் மாநகரம் முழுவதும் அதிமுக கொடி கம்பம், அமமுக கொடிக்கம்பத்துடன் இணைந்து பறக்கிறது. இந்த காட்சிகளை பார்க்கும்போது கரூரில் அதிமுகவும், அமமுக-வும் இணைந்ததை போல் உள்ளது. ஆர்ப்பாட்டத்திற்காக நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரை தாங்கிப் பிடிப்பதற்காக சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன் சிலை பாதுகாப்பு தடுப்புகள் மீது சவுக்கு கட்டைகளை நிறுத்தி கயிறுகள் மூலம் கட்டி வைத்துள்ளனர். தலைவர்கள் சிலையை அவமதிக்கும் விதமாக இந்த காட்சி உள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.