அதிமுக 53ஆவது ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்ட தேதி அறிவிப்பு: நிர்வாகிகளே கட்டாயம் இதை செய்யுங்க.! - இபிஎஸ்

AIADMK 53rd Annual Meeting: அதிமுக 53ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தொடர்பான பல்வேறு உத்தரவுகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார்.

Continues below advertisement

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் 2024, அக்டோபர் 17 முதல் 20 வரை நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி K. பழனிசாமி அறிவிப்பிற்கிணங்க, 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' 53-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முள்ளிட்டு, 17.10.2024 முதல் 20.10.2024 வரை நான்கு நாட்கள் 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 53-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் இத்துடன் வெளியிடப்படுகிறது.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தை, கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு , மருத்துவ அணி இலக்கிய அணி அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டுபொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும் "நமது புரட்சித் தலைவி அம்மா" நாளிதழுக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' . எடப்பாடி K பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை 

Continues below advertisement