தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் இன்றைய அரசியல் சூழலை எடுத்துக்கொண்டோம் என்றால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக (DMK) மற்றும் அதிமுக (Admk) இரண்டு கட்சிகள்தான் பிரதான கட்சிகளாக இருந்து வருகின்றன. இரண்டு கட்சிகள்தான், தொடர்ந்து மாறி, மாறி ஆட்சியும் செய்து வருகிறது. அதிமுக இன்று 52 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. ஜெயலலிதாவின் மரணம், அதிமுக கட்சியின் அடுத்தடுத்த பிளவு ஏற்பட்ட பிறகு கூட, கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் பிடித்து அசத்தி இருந்தது. இந்தளவிற்கு பலமான கட்டமைப்பை கொண்டிருக்கும், அதிமுக என்ற அமைப்பு உருவாவதற்கு, ஒரு மேடைப்பேச்சு தான் காரணம் என்றால் நம்ப முடியுமா? செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எம்.ஜி .ஆர் பேசியதின் விளைவு தான் அதிமுக கட்சி உருவாக காரணம். திருக்கழுக்குன்றத்தில் 52 ஆண்டுகளுக்கு முன் என்னதான் நடந்தது, என்பது குறித்து பார்க்கலாம்.
அரசியலில் இருவருக்கு மோதல் என்றால், ஏதோ ஒரு கட்டத்தில் உச்சத்தை அடைந்தே ஆக வேண்டும் அல்லவா. சமீபத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருக்கும் இருந்த மோதல், ஒற்றைத்தலைமையின் பொழுது உச்சகட்டத்தை அடைந்ததை போல, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கர்ஜித்தார் எம்ஜிஆர். இதுவே அவர் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி திருக்கழுக்குன்றம் பகுதியில் அண்ணா சிலையை திறந்து வைத்துவிட்டு, அவர் பேசியதுதான் புயலைக் கிளப்பியது.
அப்படி என்ன பேசினார் எம்ஜிஆர் ? அமைச்சர்கள் , சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குகாட்ட வேண்டுமென்று சொல்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை ஏன் திராவிட முன்னேற்ற கழகம் கேட்கக்கூடாது. ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால், அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா அதற்கு முன்னால் வந்ததா என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான், சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு, இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன்.
" கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன் "
மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள். பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் , தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன். குடும்பத்தினர் சொத்து வாங்கி இருந்தால், எப்படி வந்தது? என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம் எனக்கூட்டத்தில் பேசியிருந்தார் .
அக்கட்சியின் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் இருந்தார். மக்களிடம் நேரடித் தொடர்பில் இருந்த எம்.ஜிஆரை 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் ஏற்றினர். அன்று முதல் மூன்று முறை தொடர்ந்து எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார். இதனிடையே 1984 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பிரச்சாரத்திற்கே வராமல் முதலமைச்சரானார் என்றால் அது எம்.ஜி.ஆர் தான். 1987 வரை தொடர்ந்து 10 ஆண்டுகள் முதலமைச்சரான எம்.ஜி.ஆர் முதலமைச்சராகவே மறைந்தார்.