Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (10.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட இருந்த மின்நிறுத்தம் ஜுன் 12 -ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

 

மேமாத்தூர் துணை மின்நிலையம்

அந்த வகையில் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட 33/11 KV மேமாத்தூர் துணைமின்நிலையத்தில் இருந்து செல்லும் 11KV மின்பாதைகளான கீழமாத்தூர், மேமாத்துர், திருவிளையாடம், ஆறுபதி ஆகிய மின் பாதைகளில் மின் வினியோகம் பெறும் பகுதிகளான கீழமாத்தூர், வாழ்க்கை, வல்லம், பழையதிருச்சம்பள்ளி, பெரிய மடப்புரம், மேமாத்தூர், சாத்துனூர், கீழபரசலூர், மேலபரசலூர், பரசலூர், அறுபாதி, விளநகர், மேலக்கட்டளை, கடலி, ஒட்டங்காடு, நெடுவாசல், பெருங்குடி, கூடலூர் , ராதா நல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளையதினம் 10.06.2025 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செம்பனார்கோயில் உதவி செயற்பொறியாளர் சரவணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தார்.

 

தேதி மாற்றம்

இந்நிலையில் நாளையதினம் நடைபெற இருந்த மின்நிறுத்தமானது பல்வேறு நிர்வாக காரணங்களால் ஜுன் 12 -ம் தேதி மாற்றி மேற்கொள்ளப்படுவதாக செம்பனார்கோயில் உதவி செயற்பொறியாளர் சரவணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.