Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (25.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 


மாதாந்திர மின் பராமரிப்பு பணி 


தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.


மின்நிறுத்த நேரம் 


பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 


குத்தாலம் மின் நிலையம் உதவி செயற்பொறியாளர் செய்தி குறிப்பு


நாளை 25-01-2025 சனிக்கிழமை அன்று குத்தாலம், பாலையூர், கடலங்குடி, மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்னோட்டம் பெறும் பகுதிகளான மருத்தூர், தெரழுந்தூர், மேலையூர், திருவேள்விக்குடி, அஞ்சலாறு, கண்டியூர், நாகமங்கலம், ஆலங்குடி, வில்லியநால்லூர், பாலையூர், கொக்கூர், பழையகூடலூர், மல்லியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்றைய தினம் காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை மேற்கண்ட மின்பாதைகளில் மின் வினியோகம் இருக்காது என குத்தாலம் உதவி செயற்பொறியாளர் அருள்செல்வன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Raj Kiran : ”புகைப்படத்தை வச்சு ஏமாத்துவாங்க!” சீமான் மீது மறைமுக தாக்கு? ராஜ்கிரணின் பகீர் பதிவு


மயிலாடுதுறை துணை மின்நிலையம் 


இதேபோன்று மயிலாடுதுறை கோட்ட மயிலாடுதுறை நகர் உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: நாளைய தினம் மாதந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் தருமபுரம், அண்ணாநகர், மூங்கில் தோட்டம், தரங்கம்பாடி சாலை, குமரகட்டளை தெரு, ராஜேஸ்வரி நகர், எல்பி நகர், தருமபுரம், வடக்கு ராமலிங்கம் தெரு, அடியக்கமங்கலம், ஆர்பிஎன் நகர், பால்பண்ணை, மன்னம் பந்தல், ஆறுபாதி ரோடு, வடகரை ரோடு, எஸ்ஐடிசிஒ, குளிச்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.


மாறுதலுக்கு உட்பட்டது 


மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.