Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (23.01.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 


மாதாந்திர மின் பராமரிப்பு பணி 


தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.


மின்நிறுத்த நேரம் 


பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 


மயிலாடுதுறை மின் கோட்டம்


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின் கோட்டம் குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 23.01.2025 வியாழக்கிழமை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உதவி செயற் பொறியாளர்கள் குத்தாலம் உதவி செயற் பொறியாளர் அருள்செல்வன், மயிலாடுதுறை உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள், மயிலாடுதுறை புறநகர் உதவி செயற் பொறியாளர் பாலமுருகன்  ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;


எதிர்வரும் 23.01-2025 வியாழக்கிழமை அன்று மயிலாடுதுறை துணைமின் நிலையங்களில் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மேற்படி துணையின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது எனவும் அதேபோன்று குத்தாலம் துணை மின்நிலையத்தில் மின் வினியோகம் பெறும் பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 வரை மேற்படி துணையின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் ஆகிய தெரிவித்துள்ளார்.


மின்நிறுத்த பகுதிகள் 


மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் திருஇந்தளூர், பூம்புகார் சாலை, ஆனந்த தாண்டவம் சாலை, சீர்காழி சாலை, கால் டாக்சி, ராஜா தெரு, வடக்கு ராமலிங்கம் தெரு, புது அக்கரகாரம், மதுர நகர், மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள்  கிளியனூர் உயரழுத்த மின்பாதையில் இருந்து மின் விநியோகம் பெறும்  பெருஞ்சேரி, எலந்தங்குடி, அரிவேலூர், அகரகீரங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.


 


குத்தாலம் பகுதிகளில் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் 


மூவலூர், காஞ்சிவாய், கோடிமங்கலம், சிவனாகரம், கோனேரிராஜபுரம், கோமல், கந்தமங்கலம், குத்தாலம், முருகமங்கலம், மாங்குடி, வானாதிராஜபுரம், பேராவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீர்காழி மின் கோட்ட மின் நிறுத்தம் 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டம் பகுதிகளான வைத்தீஸ்வரன் கோயில், திருவெண்காடு மற்றும் ஆச்சாள்புரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 23.01.2025 வியாழக்கிழமை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உதவி செயற் பொறியாளர்கள் சீர்காழி வடக்கு உதவி செயற் பொறியாளர் ராஜா, சீர்காழி தெற்கு உதவி செயற்பொறியாளர் விஜயபாரதி  ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நாளை தினம் மின் பராமரிப்பு பணிக்காக கீழ்க்கண்ட ஊர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது‌. வைத்தீஸ்வரன்கோயில் (நகர்)  எடக்குடி வடபாதி, சட்டநாதபுரம், காரைமேடு, தென்னலக்குடி, மேலச்சாலை, திருவெண்காடு நகர் தெற்கு, சாலக்கரை, நாயக்கர்குப்பம், பெருந்தோட்டம், சாவடிகுப்பம், கொள்ளிடம், மாங்களாம்பட்டு, தைக்கால், குமிளங்காடு கோபாலசமுத்திரம், சரஸ்வதிவிளாகம், தாண்டவன்குளம்,  பழையபாளையம், கொடகாரமூலை, கொட்டாய்மேடு அதன் சுற்று வட்டார பகுதிகள் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளனர்.


மாறுதலுக்கு உட்பட்டது 


மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.