மயிலாடுதுறை, ஜூலை 20: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மயிலாடுதுறை 110/33-11 கிவோ தொகுப்பு துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பேச்சாவடி மற்றும் பல்வேறு முக்கிய மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் அவசர கால பழுதுபார்க்கும் பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை, 21.07.2026) அன்று நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதிகளுக்கு உட்பட்ட ஊர்கள் மற்றும் நகர் பகுதிகளில் மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படவுள்ளது என்று உதவி செயற்பொறியாளர் பொறிஞர் G. ரமேஷ் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

மின் தடை விவரங்கள்

இடம் - நிலையம்: 110/33-11 கிவோ தொகுப்பு துணைமின் நிலையம், மயிலாடுதுறை (பேச்சாவடி)

மின் தடை நாள்: 21.07.2026 (செவ்வாய்க்கிழமை)

Continues below advertisement

மின் தடை நேரம்: காலை 09.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை

இதன்காரணமாக, நாளை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 05.00 மணி வரை மொத்தம் எட்டு மணி நேரத்திற்கு மின் விநியோகம் தடைபடும். பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்களின் அவசியமான தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு மின் வாரியத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்கள் அல்லது பருவநிலை மாற்றங்களை பொறுத்து மின் நிறுத்த தேதி மற்றும் நேரத்தில் மாறுதல்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் தடை செய்யப்படும் முக்கிய பகுதிகள்

* பெசன்ட் நகர்

* மேலவீதி

* மேலமடவிளாகம்

* அய்யாரப்பர் கீழவீதி

* அய்யாரப்பர் தெற்குவீதி

* திருவாரூர் சாலை

* சுப்ரமணியபுரம்

* ஆராயதெரு

* காமராஜர் காலணி

* ஸ்ரீ நகர் காலணி

* 1 முதல் 5 வரையிலான புது தெருக்கள்

* தைக்கால் தெரு

* டபிர் தெரு

* தெற்குவீதி

* அரண்மனைநகர்

* திருவள்ளுவர் நகர்

* பூக்கடைதெரு

* அண்ணா வீதி

* மேலஒத்தசரகு

* ஜங்சன்

* கஸ்தூரி பாய் தெரு

* தெற்கு சாலிய தெரு

* பெரிய சாலிய தெரு

* வடக்கு சாலிய தெரு 

* அய்யாரப்பர் கோயில் தெரு

* திருவள்ளுவபுரம்

* அய்யனார் கோயில் தெரு 

* ஹாஜியார் நகர்

* பட்டமங்கல தெரு

* பியர்லஸ் தியேட்டர் பகுதி * சின்னகண்ணார தெரு 

* கச்சேரி சாலை

* கலைஞர் காலணி

* காமராஜர் சாலை

* நீதிமன்ற வளாகம் ரேவதி நகர்

* புனுகீஸ்வரர் கோயில் கீழ்வீதி

* தெற்குவீதி, மேலவீதி 

* வடக்குவீதி, கூறைநாடு 

* பாசிகடைத் தெரு

* அறுபத்து மூவர் பேட்டை

* மேம்பாலம் மற்றும் மயிலாடுதுறை நகர் பகுதி முழுவதும்.

மேலும், 

* மூவலூர்

* சித்தர்காடு

* அரையபுரம்

* மறையூர்

* மகாதான தெரு

* பெரிய கடைத் தெரு

* வழுவூர்

* எலந்தங்குடி

* கப்பூர்

* வடகரை 

* அன்னவாசல்

* இளையாளுர்

* அரங்ககுடி

* செறுதியூர்

* குளிச்சார்

* மங்கநல்லூர்

* திருவாரூர் ரோடு

* சீனிவாசபுரம்

* வாட்டர் ஒர்க்ஸ்

*டவுன் I, II & III

* வழுவூர்

* வடகரை

* A.N. புரம்

* கிளியனூர்

மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமப்புற மின்பாதைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அவ்வப்போது ஏற்படும் எதிர்பாராத நிர்வாக காரணங்கள் அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளைப் பொறுத்து மின் நிறுத்த தேதி மாற்றி அமைக்கப்படலாம் என்பதால், மின் நுகர்வோர்கள் அனைவரும் மின் வாரியத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.