Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (21.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
பொறையார் துணை மின்நிலையம்
அந்த வகையில் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட 110/11 KV பொறையார் துணை மின் நிலையத்தில் வரும் 21.06.2025 நாளைய தினம் சனிக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெரும்பகுதிகளான பொறையார், எருக்கட்டாஞ்சேரி, தரங்கம்பாடி, சந்திரபாடி, காட்டுசேரி, ஆயப்பாடி, சாத்தனூர், சங்கரன்பந்தல், தில்லையாடி, திருவிடைகழி T.மணல்மேடு, கண்ணங்குடி, மாத்தூர் திருக்கடையூர் அனந்தமங்களம், ஆணைகோயில், திருமெய்ஞானம், P.P.நல்லூர், மாணிக்கபங்கு, பெருமாள்பேட்டை, குட்டியாண்டியூர் ஆகிய பகுதிகளுக்கு காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செம்பனார்கோயில் உதவிசெயற்பொறியாளர் சரவணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை துணைமின் நிலையம்
இதேபோன்று மயிலாடுதுறை துணை மின்நிலையத்தில் நாளைய தினம் 21.06.2025 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மயிலாடுதுறை துணை நிலையத்திலிருந்து விநியோகம் செய்யப்படும் சீனிவாசபுரம், சுப்ரமணியபுரம், கேணிக்கரை, ஸ்ரீ நகர் காலனி, ஆராய தெரு, ரேவதி நகர், நல்லத்துகுடி, முளப்பாக்கம், எலந்தங்குடி, மங்கநல்லூர், தாங்கைசாலை, செருதியூர், வடகரை, அரங்ககுடி, கிளியனூர் வழுவூர், செங்குடி, சித்தர்காடு, மறையூர், கோடங்குடி, ஆசிகாடு, முங்கில் தோட்டம் பாரதி நகர், வண்டிகாரர் தெரு, அகரகீரங்குடி, அறியலூர், பெருஞ்சேரி, அல்லூர், காவேரி நகர் மயிலாடுதுறை ரயிலடி, கூறைநாடு, மீன்மார்கேட், காமராஜர் சாலை, பெரியபள்ளிவாசல் தெரு. கோர்ட்டு ரோடு, திருமஞ்சன வீதி, பெசன்ட் நகர், பட்டமங்கல தெரு. கச்சேரி ஆகிய ஊர்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விதியோகம் இருக்காது என மயிலாடுதுறையில் உதவிசெயற்பொறியாளர் அப்துல் வஹாப் மரைக்காயர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.