Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (15.10.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 


மின் பராமரிப்பு பணி


தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 


Bigg Boss: "அர்னவ் நீ பக்கா ஃபேக்! அருண் அப்பாவி இல்ல" பிக்பாஸ் போட்டியாளர்களை விளாசித் தள்ளிய ரவீந்தர்!


மின் நிறுத்தம் செய்யப்பட்டும் இடங்கள் 


அந்தவகையில் தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற் பொறியாளர் செந்தில் நாதன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் பாலையூர், துணைமின் நிலையத்தில் 15.10.2024 செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பாலையூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் பாலையூர், பருத்திக்குடி, காரனூர், நக்கம்பாடி, கோமல், தேரழுந்தூர், நச்சினார்குடி, மருத்தூர், வடமட்டம், கோனேரிராஜபுரம், கரைகண்டம், ஸ்ரீகண்டபுரம், சிவனாகரம், வைகல், மாந்தை, கங்காதரபுரம் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Gujarat Drugs: மீண்டுமா..! குஜராத்தில் சிக்கிய 518 கிலோ கொக்கைன் - மொத்த மதிப்பு ரூ.5,000 கோடி என தகவல்


கடைசி நேர மாறுதல் 


மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.