Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று வியாழக்கிழமை  (18.09.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட்ட உள்ளதாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

Continues below advertisement

மயிலாடுதுறை, மணக்குடி, குத்தாலம் மற்றும் கடலங்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின் கோட்டத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, மணக்குடி, குத்தாலம் மற்றும் கடலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்றைய தினம் 18.09.2025   வியாழக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர்கள் அருள்செல்வன் மற்றும் கலியபெருமாள் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் 

மயிலாடுதுறை துணை மின்நிலையம் 

* திருவாரூர் ரோடு

* குமரக்கட்டளை தெரு

* பெசன்ட் நகர்

* பட்டமங்கலத்தெரு

* புதிய பேருந்து நிலையம்

* கச்சேரி ரோடு

* கோர்ட் ரோடு

* காமராஜர் சாலை

* திருமஞ்சன வீதி

* ரேவதி நகர்

* ஸ்ரீநகர் காலனி

* சீனிவாசபுரம்

* புனுகீஸ்வரர் வீதி

* பொன்னிநகர்

* மணிக்கூண்டு

மணக்குடி துணை மின் நிலையம்

* மணக்குடி

* சோழசக்கரநல்லூர்

* சேமங்கலம்

* மொழையூர்

* வெப்பகுளம்

குத்தாலம் துணை மின் நிலையம்

* குத்தாலம் டவுன்

* குத்தாலம் தேரடி

* மாதிரிமங்கலம் 

* சேத்திரபாலபுரம்

* அரையபுரம்

* தொழுதாலங்குடி

* கீழவெளி

கடலங்குடிதுணை மின் நிலையம்

* கடலங்குடி

* வாணாதிராஜபுரம்

* சோழம்பேட்டை

* மாப்படுகை

* கோழிகுத்தி

* முருகமங்கலம்

* திருமணஞ்சேரி 

* ஆலங்குடி 

ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும், அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.