தமிழகம் முழுவதும் கொடிய விஷபாம்புகளிடம் இருந்து பலரை காத்த சீர்காழி இளைஞரை பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவ உதவி கேட்டு கோரிக்கை வைத்த நிலையில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.

Continues below advertisement

வாழ்விடம் இழந்த ஜீவராசிகள் 

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷத்தன்மை, இதனால் பலரும் பாம்பு கடித்து உயிரை இழக்கும் சம்பவம் காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வுகளில் ஒன்று. உலகம் தோன்றிய நாள் முதல் பரினாம வளர்ச்சியும் படிப்படியாக காடுகள் அழிக்கப்பட்டு மனித வாழ்விடம் அமைப்பதற்காக கட்டிடங்கள் உருவாகி காடுகளின் அளவு குறைய தொடங்கியது. இதன் காரணமாக காடுகளில் வாழ்ந்த ஜீவராசிகள் அவர்களின் வழி தடம் தேடி நகர தொடங்குகின்றன. 

விலங்குகளின் சீற்றத்திற்கு ஆளாகும் மனிதர்கள் 

அவ்வாறு விலங்குகள் தங்கள் வாழ்விடத்தை இழந்த அவர்கள் வாழ்ந்த வழி தடங்களில் செல்ல தொடங்குகின்றன, அவ்வாறு அவர்கள் செல்லும் பாதைகளில் தற்போது மனிதர்களின் ஆக்கிரமிப்பு வீடுகள் , கட்டிடங்கள், தோட்டங்கள் என அதிகரித்ததன் விளைவாக விலங்குகளின் சீற்றத்திற்கு மனிதர்கள் ஆளாகும் சூழலை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அதற்கு உதாரணமாக யானைகளால் மனிதர்கள் தாக்கப்படுவதை வாழை கரும்பு போன்ற தோட்டங்களும், வயல்களும் சேதம் படுத்தும் நிகழ்வும், இதுபோன்று புலிகள் போன்ற விலங்குகளால் மனிதர்கள் கொல்லப்படும் நிகழ்வும் நடந்தேறும் செய்திகளை நாம் அன்றாடம் செய்தி ஊடகங்கள் வழியை அறிந்து வருகிறோம்.

Continues below advertisement

புளிச்சக்காடு தினேஷ்குமார் 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புளிச்க்காடு பகுதியை சேர்ந்த இளைஞர் தினேஷ்குமார். இவர் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்றுநரான இவர் அப்பகுதி உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலையினை கற்றுத்தருகிறார். மேலும் கொரோனா காலத்தில் ஏராளமான ஏழை குடும்பங்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்துள்ளார். மேலும் தன்னால் முயன்ற பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிறுவயது முதலே அவ்வப்போது அவர் வசிக்கும் பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்த பாம்புகளை லாவகமாக பிடித்து பாதுகாப்பான வனப்பகுதியில் விட்டு வருகிறார். இதுவரை 5000 க்கும் மேற்பட்ட பாம்புகளை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டுள்ளார்.

பாம்பு சீண்டலுக்கு உள்ளான பாம்பு பிடிவீரர் 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டின் உள்ளே புகுந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை பிடித்த போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு தினேஷ்குமாரை கடித்துள்ளது. இதனால் பாம்பின் விஷம் உடல் முழுவதும் பரவி கடந்த சில மாதங்களாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் அவரின் மருத்துவ செலவிற்கு பல லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த அவரது உறவினர்கள் மருந்துவ உதவி கோரினர். வீடுகளுக்குள் புகுந்த கொடிய விஷத்தன்மை கொண்ட பல பாம்புகளை பிடித்து பலரது உயிரைக் காப்பாற்றிய தினேஷ்குமாரின் உயிரை காக்க முடித்தவர்கள் முன்வரவேண்டும் என்ற செய்தியினை ஏபிபி நாடு செய்தியாக வெளியிட்டது. 

மயிலாடுதுறை MP யின் உயிர்காக்கும் உதவி! 

இந்த சூழலில் ஏபிபிநாடு செய்தி எதிரொலியாக இந்த தகவலை அறிந்த மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உயிருக்குப் போராடும் பாம்பு பிடிவீரர் தினேஷ்குமாரின் சிகிச்சைக்கான செலவுத் தொகைக்காக ரூபாய் 5 லட்சத்தினை பாராளுமன்ற நிதியில் இருந்து வழங்கப்பட்டு வழிவகை செய்துள்ளார்.