Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (19.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மின் பாதை பணிகள் 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

மணக்குடி துணை மின்நிலையம்

அந்த வகையில் மயிலாடுதுறை மின் கோட்டத்திற்கு உட்பட்ட மணக்குடி துணைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மணக்குடி துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை தினம் 19.06.2025 வியாழக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மயிலாடுதுறை நகர உதவி செயற்பொறியாளர் கலியபெருமாள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் 

சேமங்கலம், ஆலவெளி, நத்தம், எறுமல், ஏஎன்புரம், சோழசக்கரநல்லூர், நத்தம், மெழையூர், நாகங்குடி, லட்சுமிபுரம், லலிதா பரமேஸ்வரி நகர், மாப்படுகை, வேப்பங்குளம், சாவடி, ஓலையாம்புத்தூர், மணக்குடி, கீழ்இருப்பு, கஞ்சா நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.