மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தவரை அரசு வழங்கும் பயிற்சி திட்டத்தில் சேர மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational Test ) அளிக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க : Mayiladuthurai: மூன்றரை வயது சிறுமி பாலியல் வழக்கு - மயிலாடுதுறை ஆட்சியரை தொடர்ந்து எஸ்பிக்கு சிக்கல்..?

பயிற்சிக்கான தகுதிகள் 

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி., எம்.எஸ்.சி நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங், மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்குபெற 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : Suzhal 2 : ஜப்பானில் ட்ரெண்டாகி வரும் சுழல் 2...தமிழில் ஏன் ரசிகர்களை கவரவில்லை ?

அயல்நாட்டில் வேலைவாய்ப்பு 

இப்பயிற்சிக்காக கால அளவு இரண்டு மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும். இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். 

இணையதளத்தில் பதிவு

இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com  என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 6-வது தளத்தில் அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுக வேண்டும். தொலைபேசி எண்: 04364-211217 மற்றும் 7448828509 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.