Just In

Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா

Impact Makers Conclave LIVE: தமிழர் பார்வையில் தடம் பதிக்கும் தமிழ்நாடு, வளர்ச்சிக்கான ஆலோசனைகளை விவாதிக்கும் இம்பேக்ட் மேக்கர்ஸ் மாநாடு

உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி

“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு

எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?
மதுரையில் கரை புரண்டோடும் வைகை - போக்குவரத்து பாதிப்பு
மதுரை வைகை ஆற்றில் 15,000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement

வைகை
கடந்த சில நாட்களாக தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தண்ணீர் அதிகமாக செல்வதால், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு கரையை உரசியவாறு தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது.
Continues below advertisement
மேலும், மதுரை, சிவகங்கை, மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் வைகை அணையில் இருந்து 7 மதகு கண் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வைகை அணை மற்றும் நிலக்கோட்டை பேரணை ஆகிய அணைகளின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால் மதுரை வைகை ஆற்றில் 15,000 கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்து கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள மாவட்ட நிர்வாகம், கால்நடைகளை ஆற்று பகுதிக்குள் அழைத்து செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது. அற்றங்கரையோர சிம்மக்கல் தரை பாலம் மற்றும் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளதால் இரு சாலைகளிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
- அதிமுக தொண்டர்கள் முடிவு எடுத்து விட்டால் அதை யாரும் மாற்ற முடியாது - அடித்து சொல்லும் செல்லூர் ராஜூ
இதனால் கோரிப்பாளையத்தில் இருந்து, சிம்மக்கல் நெல்பேட்டை செல்லும் ஏ.வி. மேம்பாலம் மற்றும் யானைக்கல்லில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் மேம்பாலத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது தண்ணீரின் வேகம் குறைந்தாலும் கரையோரம் உள்ள சாலைகள் முடங்கியுள்ளதால் போக்குவரத்தி நெறிசல் குறையாமல் இருந்துவருகிறது. இன்று காலை 11 மணிக்கு வைகை அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்படும் என சொல்லப்படுகிறது. அதனால் ஆற்றில் தண்ணீர் வேகம் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.