திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தோட்டக்கலைதுறை கட்டுப்பாட்டில் மூன்று பூங்காக்கள் உள்ளன. கொடைக்கானல் ஏரி அருகே பிரையண்ட் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகே உள்ள செட்டியார் பூங்கா, கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள ரோஜா பூங்கா, இந்த மூன்று பூங்காக்களும் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பூங்காக்களுக்கு உள்ளே செல்வதற்கு நுழைவு கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த கோடை சீசன் காலத்தில் நடைபெற்ற மலர் கண்காட்சி விழா மற்றும் கோடை விழாவினை காண்பதற்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.


Accident: காலையிலே சோகம்! பேருந்தும், லாரியும் மோதியதில் 18 பேர் மரணம் - வேதனையில் ஆக்ரா




நபர் ஒன்றுக்கு 75 ரூபாய் கட்டணம் ஆகவும் ,சிறியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு சுற்றுலா பயணிகளிடையே எதிர்ப்பு ஏற்பட்டது. உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைக்க கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கமான நாட்களில் கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, மற்றும்  ரோஜா பூங்கா ஆகியவற்றிற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 30 ரூபாயும், சிறியவர்களுக்கு 15 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்றிலிருந்து புதிய கட்டண முறையும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.


Vikravandi bypoll 2024: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்களித்தார் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா




ரோஜா பூங்கா மற்றும் பிரையண்ட் பூங்கா செல்ல நுழைவு கட்டணமாக இருந்த 30 ரூபாய் கட்டணம் 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிறியவர்களுக்கு 15 ரூபாயாக இருந்த நுழைவு கட்டணம் 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 25 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோல மாணவர்களுக்கு 25 ரூபாய் கட்டணமாகவும் இந்த இரண்டு பூங்காக்களுக்கு உள்ளே நுழைய நுழைவுக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரோஜா பூங்காவில் இலவச வாகன நிறுத்தமாக இருந்த நிலையில் தற்போது இருசக்கர வாகனத்திற்கு 50 ரூபாயும் கார்களுக்கு 100 ரூபாயும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.


Vada Pav: அம்பானி வீட்டு உணவு விருந்து: ‘வடா பாவில் முடி’ - வீடியோவில் அதிர்ச்சி




செட்டியார் பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக ஏற்கனவே 20 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது கூடுதலாக இருபது ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு 40 ரூபாயாக இன்றிலிருந்து நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சிறியவர்களுக்கு 15 ரூபாயாக இருந்த நுழைவு கட்டணம் ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டு 20 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த செட்டியார் பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக மாணவர்களுக்கு இருபது ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட புதிய நுழைவு கட்டணம் இன்றிலிருந்து வசூல் செய்யப்படுகிறது. திடீரென முன்னறிவிப்பு இன்றி உயர்த்தப்பட்ட கட்டண உயர்வால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்