தேனி மாவட்டம், மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (37). அப்பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரேமலதா (30), இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர்.  கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரேமலதா தனது குழந்தைகளுடன் மதுரை உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். வெள்ளைச்சாமி மேட்டுப்பட்டியில் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பிரேமலதா தேவாரம் அருகே மேட்டுப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் அடகு வைத்திருந்த தனது தங்க நகையை திருப்பி மறு அடகு வைப்பதற்காக நேற்று காலை அந்த வங்கிக்கு வந்துள்ளார்.


Madurai | மதுரையில் நாயக்கர் கால வரி விதிப்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு..




இதுபற்றி அறிந்த வெள்ளைச்சாமி தனது தாய் மற்றும் உறவினர்கள் சுப்புலட்சுமி, ஜெகதீஸ்வரன், சாந்தி ஆகியோருடன் வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு வெள்ளைச்சாமி தனது மனைவியுடன் தகராறு செய்திருந்தார். அப்போது திடீரென தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து பிரேமலதாவை சரமாரியாக வெட்டினார். இதனை பார்த்த வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த பிரேமலதா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்தார்.




இதையடுத்து வெள்ளைச்சாமி உட்பட 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பிரேமலதா சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வெள்ளைச்சாமி அவரது தாயார் அமுதா உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகள் சம்பவத்தன்று இருந்த வாடிக்கையாளர் ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


Nayanthara: வாடகைத்தாய் மூலம் குழந்தை.. நயன்தாராவை சுற்றும் அடுத்த புயல்.!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண