தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள குளங்களான வேட்டுவன்குள கண்மாய், ஓட்டக்குளம் கண்மாய், பொம்மிநாயக்கன்பட்டி பெரியகண்மாய், உள்ளிட்ட மூன்று கண்மாய்களும் கடந்த 15 நாட்களுக்கு முன்பே அதன் முழு கொள்ளளவை எட்டி நிறைந்தது. இதனை தொடர்ந்து விவசாயிகள் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.


ABP Exclusive: 'அந்தரத்தில் தொங்கும் கண்ணாடி ஜன்னல்' ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலட்சியம்! அச்சத்தில் பயணிகள்!




இந்நிலையில் நேற்றுமுன் தினம் நள்ளிரவில் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையின் காரணத்தால் குளங்களுக்கு வரும் நீர் அதிகரித்த நிலையில் குளங்களிலிருந்து வெளியேறும் உபரி நீரின் அளவும் அதிகரித்தது. இதனால் பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு நீர் அனைத்தும் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களில் புகுந்து நெல், கரும்பு, வாழை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.


Flood Relief: நிலைகுலைந்த சென்னை! வெள்ள நிவாரணம் ரூ.6,000 எப்போது கிடைக்கும்? அமைச்சர் உதயநிதி பரபரப்பு பதில்!




மேலும் பிரச்சனை குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், “கண்மாயகளில் ஏற்கனவே நீர் முழுமையாக தேக்கி வைக்கப்பட்டு நிரம்பி வழிந்து வரும் நிலையில், கண்மாய்க்கு வரும் நீரை பொதுப்பணித்துறையினர் அடைக்காமல் அலட்சியம் காட்டி உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் சோத்துப்பாறை மற்றும் மஞ்சளார் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டு கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கண்மாய்களில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவும் அதிகரித்து பயிர்களுக்குள் புகுந்து பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கண்மாய்களிலிருந்து வெளியேறும் உபரி நீரை குறைக்காவிட்டால் பயிர்கள் அழுகி முழுமையாக சேதங்கள் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.


இந்தியாவை அதிரவிட்ட ரெய்டு! வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கொத்து, கொத்தாக சிக்கிய பணம்!




அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரியிடம் கேட்ட பொழுது, நாங்கள் சோத்துப்பாறை அணையில் இருந்து வரும் உபரி நீரை குளங்களுக்கு திறக்கவில்லை என்று கூறியதாகவும், இதேபோன்று மஞ்சளார் அணை பொதுப்பணித்துறை அதிகாரி இடம் கேட்ட பொழுது மஞ்சளார் அணை பொதுபணித்துறை அதிகாரிகளும் நாங்கள் கண்மாய் பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கவில்லை எனவும் அலட்சியமாக பதில் அளித்ததாக குற்றம் சாட்டினர்.


இந்தியாவை அதிரவிட்ட ரெய்டு! வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கொத்து, கொத்தாக சிக்கிய பணம்!




மேலும் இதுவரை பொதுப்பணித்துறை அதிகாரிகளோ, வருவாய்த்துறை அதிகாரிகளோ மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவோ, பார்வையிடவோ வரவில்லை. உடனடியாக மழை வெள்ள நீரை விலை நிலப்பகுதிகளுக்குள் செல்லாமல் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.