தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிலமலை கிராமம். இங்கு முனியப்பன் கோவில் தெருவில் வசித்து வருபவர் புஷ்பம் . இவர் கணவனை இழந்து 100 நாள் வேலை திட்டம் மற்றும் ஏலத்தோட்ட வேலைகளுக்கு சென்று வருகிறார். இவரது மகள் சந்தியா வயது 18 இளங்கலை ஆங்கில இலக்கிய முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.


Pongal 2024 Rasi Palan: தை பொங்கல் முதல் அமோகம்! 12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்?




இவரது தாய் மாமன் முருகேசன் (36) மாற்றுத்திறனாளி என்பதால் இவர்கள் வீட்டு மாடியில் வசித்து வருகிறார் .நேற்று இரவு சிலமலை பகுதியில் விடிய விடிய பெய்த மழை காரணமாக வீட்டில் சுவர் மொத்தமாக இடிந்து விழுந்ததில் வீட்டில் அமர்ந்து செமஸ்டர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த சந்தியா மீது வீட்டு சுவர்  விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது தாய் மாமன் முருகேசன் தலையில் காயம் ஏற்பட்டது. இவரது தாயார் அந்த சமயத்தில் கடைக்கு சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


Vadakkupatti Ramasamy: 2024-ல் சந்தானத்தின் முதல் படம்.. ரிலீஸ் தேதியை அறிவித்தது “வடக்குப்பட்டி ராமசாமி” படக்குழு




வீடு இடிந்து விழுந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் உடனடியாக போடிநாயக்கனூர் தீயணைப்பு மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடலை மீட்க முயற்சி செய்தனர். வீடு முழுவதும் இடிந்து விழுந்து நிலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டுவரப்பட்டு இடிபாடுகள் அகற்றப்பட்டு சந்தியா உடல் கண்டெடுக்கப்பட்டது. மீட்டெடுக்கப்பட்ட சந்தியாவை பரிசோதித்து  பார்த்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இடிபாடுகளிடையே சிக்கியதில் சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


Pongal Parisu Thogai 2024: மக்களே ரெடியா..! ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம்




உடனடியாக அவரது உடலை மீட்டு போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.காயம் அடைந்த முருகேசன் போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். போடிநாயக்கனூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் வீடு இடிந்து விழுந்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.