தேனி மாவட்டம் கம்பம் மணிகட்டி ஆலமரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு  போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 பெண்கள் உள்பட 6 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


Joe Biden: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டிலே அதிரடி ரெய்டு..! சிக்கிய முக்கிய ஆவணங்கள், பறிபோகிறதா பதவி?




மேலும் விசாரணை நடத்தியதில் அவர்கள் வருசநாடு சீலமுத்தையாபுரம் பகுதியை சேர்ந்த பிரபு (35), சுமதி (33), மயிலாடும்பாறை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த யோகராஜன் (35), கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த ஜெகன் (23), சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்த சிவராஜ் (37), மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த நதியா (33) என்பதும், இரண்டு சக்கர வாகனத்தில் கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, ரூ.74 ஆயிரத்து 500 மற்றும் 2 இரண்டு சக்கர வாகனங்களும், 6 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.




தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.  இவர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், மதுரை மாவட்டம், நாகமலைபுதுக்கோட்டை மேலகுயில்குடியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் காசோலை வழக்கை நான் நடத்தினேன். இதனால், அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அவரும், அவருடைய மகன்கள் சீராளன், சித்தார்த் என்ற சசிகணேஷ், பழனிசெட்டிபட்டி அண்ணா முதல் தெருவை சேர்ந்த ஜெயராமன், நாகேந்திரனின் கார் டிரைவர் முத்துசெல்வன் ஆகியோர் சேர்ந்து உத்தமபாளையம் கோர்ட்டில் எனக்கு அரசு வழக்கறிஞர் பணி வாங்கிக் கொடுப்பதாக கூறினார்கள்.


Bigg Boss 6 Tamil: பிரம்மாண்டமான பிக்பாஸ் இறுதிப்போட்டி...! Grand Finale எப்போது? எப்படி பார்ப்பது?


Bigg Boss 6 Tamil: பிரம்மாண்டமான பிக்பாஸ் இறுதிப்போட்டி...! Grand Finale எப்போது? எப்படி பார்ப்பது


அதை நம்பி நான் ரூ.3 லட்சம் கூகுள்-பே மூலம் ரூ.6 லட்சமும் என மொத்தம் ரூ.9 லட்சம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டனர் என்று கூறியிருந்தார். இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்பேரில், நாகேந்திரன், சீராளன், சித்தார்த் என்ற சசிகணேஷ், ஜெயராமன், முத்துசெல்வன் ஆகிய 5 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண