ரோகு மற்றும் மிர்கால் மீன் விரலிகளை வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கண்மாய்களில் மீன் பாசி குத்தகை எடுப்போர், சிவகங்கை பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Continues below advertisement

சுவையான மீன் உணவு

இறைச்சி வகைகளில் மீன் உணவிற்கு தனி மவுசு உண்டு. கடல் மீன், குளத்து மீன் அல்லது கண்மாய் மீன் என்று மீன் இரு வகையாக கிடைக்கிறது. சென்னை மாதிரியான பெருநகரங்களில் ஏரி மீன்கள் அதிக அளவில் கிடைக்கும். மதுரை மாதிரியான தென் மாவட்டங்களில் பெரும்பாலும் கண்மாய் மீன்களே கிடைக்கும். கடல் மீன்களில் எப்படி நெய்மீன் ஷீலா காஸ்ட்லியாக இருக்கிறதோ, அதே போல் தான், கண்மாய் அல்லது குளத்து மீனில் விரால் மீன் காஸ்ட்லி. சென்னையோடு ஒப்பிடும் போதும், தென்மாவட்டங்களில் விரால் மீன் விலை உச்சத்தில் இருக்கும். சென்னையில் கிலோ 400 ரூபாய்க்கு வாங்கும் விரால் மீன், மதுரையில் 600 முதல் 700 ரூபாய் வரை விற்கும். காரணம், அந்த அளவிற்கு அங்கு டிமாண்ட்.

Continues below advertisement

மீன் வளர்ப்பு ஊக்குவிப்பு

இப்படியான விரால் வளர்ப்பை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது. ரோகு மற்றும் மிர்கால் மீன் விரலிகளை வாங்க விரும்பும் மீன் வளர்ப்போர், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கண்மாய்களில் மீன் பாசி குத்தகை எடுப்போர், பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணையினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தகவல் வெளியிட்டுள்ளார்.

எவ்வாறு பயன்பெறலாம்

சிவகங்கை மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பிரவலூர் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் மீன் குஞ்சுகள் வளர்ப்பு செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், தற்போது ரோகு மற்றும் மிர்கால் மீன்விரலிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, மாவட்டத்தில் உள்ள மீன் வளர்ப்போர் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் கண்மாய்களில் மீன்பாசி குத்தகை எடுப்போர் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் மீன்விரலிகளை வாங்கி பயன்பெறலாம். எனவே, மீன் விரலிகளை வாங்க விரும்பும் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர் பிரவலூர் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணை, கீழப்பூங்குடி ரோடு, ஒக்கூர் சிவகங்கை – 630561 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575 – 240848 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மீன்வள ஆய்வாளர் அவர்களை 9384824553 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.​