சிவகங்கை மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள்  பெறுவதற்கு, தகுதியின் அடிப்படையில் பயன்பெறலாம் - என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
   
அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் 
 
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.  அந்தவகையில், தற்போது தாட்கோ தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற (Tattoo Making Course, Aesthetic Training Course and Semi Permanent Makeup  Courses) பயிற்சிகளை வழங்கவுள்ளது. இப்பயிற்சியினை பெறுவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவராகவும், எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவராக இருத்தல் வேண்டும். 18 முதல் 35 வயதிற்குட்பட்டவராகவும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு                ரூ.3.00  லட்சத்திற்கு மிகாமலும் இருத்தல்  வேண்டும். மேலும், இப்பயிற்சியின் கால அளவான 90 நாட்களும்  திருச்சி மாவட்டத்தில் தங்கி படிப்பதாற்கான செலவினத் தொகை தாட்கோவால் வழங்கப்படும். 
 
வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்
 
மேலும்,  குறிப்பிட்டுள்ள பயிற்சி முடித்தவுடன், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.25,000/-  வரை வருவாய் ஈட்டிடும் வகையில் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும். எனவே, ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற (Tattoo Making Course, Aesthetic Training Course and Semi Permanent Makeup  Courses)  பயிற்சிகளை பெற விரும்பும்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற  இணையதள முகவரியின் வாயிலாக பதிவு மேற்கொண்டு பயன்பெறலாம்” என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.